மேலும் அறிய

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: கைதான 6 பேருக்கு 2 ம் தேதி வரை நீதிமன்ற காவல்

அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் கைது செய்யபட்ட நிர்வாகி உட்பட 6 பேரை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

விழுப்புரம்: குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் கைது செய்யபட்ட நிர்வாகி ஜீபின் பேபி, மரியா, சதீஷ்குமார் ஆகிய மூவரை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிலும், பணியாளர்கள்  பிஜீமோகன், கோபிநாத்,அய்யப்பன் ஆகிய மூவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற  காவலில்  வைக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். 

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 15க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளியானதால் அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு சிபிசி ஐ டி  போலீசார் விசாரனை செய்து வரும் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி  விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி புஷ்பராணி, ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

அதன் படி 8 பேரையும் சிபி சி ஐ டி போலீசார் 25 ஆம் தேதி விசாரனை செய்த போது முத்துமாரி, பூபாலன் மனநலம் பாதிப்பில் உள்ளதாகவும் இருவருக்கும் சிகிச்சை அளிக்க உத்தரவு வழங்க வேண்டுமென கேட்டிருந்தனர். அதன் படி கடந்த் 25ஆம்  தேதி இருவரும் முண்டியம்பாக்கம்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா ஜீபின் பணியாளர்கள் சதீஷ், கோபிநாத், அய்யப்பன், பிஜீமோகன் ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். நாளையுடன் விசாரனை முடிய உள்ள நிலையில் இன்றே விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆறு பேரை சிபிசி ஐ டி போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது நீதிபதி புஷ்பராணி ஆஜர்படுத்தப்பட்ட  ஜீபின் பேபி மரியா சதீஷ்குமார் ஆகிய மூவரை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிலும் பணியாளர்கள்  பிஜீமோகன், கோபிநாத், அய்யப்பன் ஆகிய மூவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற  காவலில்  வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 


என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget