மேலும் அறிய

Crime: காதலிக்கு கொடுக்க 10 பவுன் செயின் திருட்டு ... காதலர் தின ஐடியா.. கம்பி எண்ணும் நகைக்கடை ஊழியர்..!

காதலர் தினத்துக்கு காதலிக்கு கிஃப்ட் கொடுக்க ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர் ஒருவர் கம்பி எண்ணும் சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது. 

காதலர் தினத்துக்கு காதலிக்கு கிஃப்ட் கொடுக்க ஆசைப்பட்டு நகைக்கடை ஊழியர் ஒருவர் கம்பி எண்ணும் சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது. 

உலகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட காதலர்கள் தங்கள் இணைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்கள் கொடுத்து அசத்தினர். அதேசமயம் மகிழ்ச்சியாக காதலர் தினம் கொண்டாட நினைத்து சிலர் பிரச்னையில் சிக்கிய சம்பவமும் ஆங்காங்கே நடைபெற்றது. அப்படியான ஒரு சம்பவம் தான் மதுரையில் நடைபெற்றுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் மேலமாசி வீதி பகுதியில் பிரபல நகை கடையான பீமா ஜூவல்லர்ஸ் இயங்கி வருகிறது. இந்த இங்குள்ள நகைக்கடையில் கீழ்த்தளத்தில் கடந்த 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு வழக்கம் போல கடை திறக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அனைத்து நகைகளும் சரியாக உள்ளதா? என மேலாளர் கார்த்திக் தலைமையில் ஊழியர்கள் சரி பார்த்துள்ளனர்.அப்போது மொத்த நகையில் 10 பவுன் குறைந்தது தெரியவந்தது. 

தவறாக கணக்கு பார்த்துவிட்டோமோ என பதறிய ஊழியர்கள் மீண்டும் ஒருமுறை சோதனையிட 10 பவுன் மதிப்பிலான செயின் காணாமல்போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மேலாளர் கார்த்திக் நகைக்கடையில் சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டனர். இதில் நகைக்கடையில் கீழ்த்தளத்தில் கடையில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் தர்ஹா காலனி பகுதியை சேர்ந்த அப்துல் பயாஸூக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 

அவர் ரூ.2.40 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்க செயினை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கவரிங் செயினை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் திருடப்பட்ட தங்க நகையை தனது காதலியின் அக்காவான கோயம்பத்தூர் அன்னை சத்யா வீதியை சேர்ந்த திவ்யா என்பவரிடம் கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து நகைக் கடை மேலாளர் கார்த்திக் தெற்குவாசல் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் நகைக்கடை ஊழியரான அப்துல் பயாஸ் மற்றும் அவரது காதலியின் அக்காவான திவ்யா ஆகிய இருவரையும் கைது செய்து நகையை மீட்டனர். மேலும் மதுரை கடையில் வேலை பார்த்து வந்த அப்துல், திருச்சியில் இதே கடையின் கிளை திறக்கப்படுவதை அறிந்து அங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். 

மேலும் அவர் கோவையைச் சேந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், ஆண்டுதோறும் காதலர் தினத்திற்கு அவருக்கு கிஃப்ட் கொடுத்து வந்துள்ளார். இந்த ஆண்டு நகையை பரிசாக கொடுக்கலாம் என திட்டமிட்ட அவர், திவ்யாவிடம் கடையில் இருந்த 10 பவுன் செயினை போட்டோ எடுத்து அனுப்பி கவரிங் செயின் தயார் பண்ண சொல்லி செயினை இடம் மாற்றியுள்ளார். அதேசமயம் பிப்ரவரி 14-ஆம் தேதி தாத்தா இறந்துவிட்டதாக கூறிவிட்டு கடைக்கு லீவு போட்டு சென்றதும் தெரிய வந்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள் - கோப்பையை ஏந்தி கலந்துரையாடி வாழ்த்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ஆடி கார் விபத்து; இழப்பீட்டை குறைத்து கொடுத்த காப்பீட்டு நிறுவனம்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
Embed widget