மேலும் அறிய

Crime: நீண்ட நேரம் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்திய பெண்! கொலை செய்த இளைஞர் - பெங்களூருவில் பரபரப்பு

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஷோபாவுக்கு அவரது மூத்த மகள் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் யாரும் எதிர்முனையில் எடுக்காததால் சந்தேகம் அடைந்துள்ளார்.

பெங்களூருவில் நீண்ட நேரம் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்தியதாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள கொடிகஹள்ளி பத்திரப்பா குடியிருப்பில் ஷோபா என்ற 56 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். கணவனை இல்லாமல் தனியாக வசித்து  வந்த இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு திருமணமாகி விட்டது. இரு மகள்களும் அப்பகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது வந்து ஷோபாவை சந்தித்து செல்வது வழக்கம். 

இதனிடையே கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஷோபாவுக்கு அவரது மூத்த மகள் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் யாரும் எதிர்முனையில் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர் நேராக ஷோபா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மூத்த மகள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஷோபா நிர்வாண முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனால் அலறிய மகளின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஷோபா வீட்டுக்கு ஓடிவந்து அங்கு அவர் சடலமாக கிடப்பதை கண்டு கொடிகஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஷோபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஷோபாவின் செல்போன் எண், சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்தனர். இதில் ஹோரேஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியரான நவீன் கவுடாவிடம் இன்ஸ்டாகிராம் மூலம் ஷோபா அடிக்கடி பேசியது தெரிய வந்தது. மேலும் ஷோபா வீட்டு பகுதியின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து நவீன் வந்து சென்றதை உறுதி செய்தனர். 

அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஷோபாவை கொலை செய்ததை நவீன் ஒப்புக்கொண்டார். இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் அது தகாத உறவாக மாறியதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. சம்பவம் நடந்த தினத்தன்று ஷோபா வீட்டுக்கு வந்த நவீன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அப்போது நீண்ட நேரம் உறவு வைத்து கொள்ளுமாறு ஷோபா வற்புறுத்தினார். இதனால் எங்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் கொலை செய்தேன் என நவீன் கவுடா போலீசில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நவீனை போலீசார் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகலRahul Gandhi on Modi | ‘’அதானிக்கு 7 ஏர்போர்ட்..டெம்போல பணம் வந்துச்சா மோடி?” ராகுல் THUGLIFE!Banana Farming | தருமபுரியில் கொளுத்தும் வெயில்! காய்ந்து விழுந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வருத்தம்Felix Gerald House Raid | FELIX வீட்டில் அதிரடி சோதனைடென்ஷன் ஆன மனைவிபோலீசாருடன் கடும் வாக்குவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
LSG vs DC LIVE Score: லக்னோவுக்கு சவால் விடும் டெல்லியின் போரல் - ஹோப் கூட்டணி!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. தலைநகரில் பரபரப்பு!
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Embed widget