மேலும் அறிய

திருவாரூர் : திருமணத்துக்கு பெண் தராததால் ஆத்திரம்.. அம்மிக்கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை..!

சிவசங்கரன்  நேற்று (24 ம் தேதி) இரவு சுமார் 12 மணியளவில் ராஜகுமாரி வீட்டுற்கு சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த மவுலியாவின் தலையில் அம்மிக்கல்லை(குழவி)தூக்கிப்போட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக முன்விரோதம் காரணமாகவும், குடும்பத்தகராறு, பழிவாங்கும் நோக்கத்தோடு கொலை, உள்ளிட்ட ஒரே மாதத்தில் தொடர் கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள்  நடைபெற்று உள்ளன. மேலும் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பெயரில் 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில், மேலும் ஒரு கொலை சம்பவம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்றுள்ளது.
 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பெண் தராததால் ஆத்திரம் அடைந்து குழவி கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை செய்யபட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் மவுலிகா (18). முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவரது உறவினரான திருக்களார் பொதியப்பன் மகன் சிவசங்கரன்(28) மவுலிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் தம்பிக்கோட்டை, ஜாம்புவான்னோடை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்த்து வந்த நிலையில் அவருக்கு பெண்தர மவுலியாவின் பெற்றோர் மறுத்துள்ளனர். 

திருவாரூர் : திருமணத்துக்கு பெண் தராததால் ஆத்திரம்.. அம்மிக்கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை..!
இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன்  நேற்று (24-ஆம் தேதி) இரவு சுமார் 12 மணியளவில் ராஜகுமாரி வீட்டுற்கு சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த மவுலியாவின் தலையில் அம்மிக்கல்லை(குழவி) தூக்கிப்போட்டுள்ளார். இதையடுத்து அவரது அலறல் சத்தம்கேட்டு எழுந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மவுலியாவை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் தப்பியோடி தம்பிக்கோட்டையில் பதுங்கி இருந்த சிவசங்கரனை மக்கள் பிடித்து முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
 
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மவுலிகா உயிரிழந்தார். இதையடுத்து முத்துப்பேட்டை காவல் துறையினர் சிவசங்கரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி மவுலிகா உயிரிழந்ததற்கு காரணமான சிவசங்கரனுக்கு காவல்துறையினர் தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மவுலிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர் மேலும் ஒருதலை காதல் காரணமாக கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது மாணவர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் மேலும் கிராமங்கள்தோறும் ரோந்து பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
 

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget