மேலும் அறிய

திருவாரூர் : திருமணத்துக்கு பெண் தராததால் ஆத்திரம்.. அம்மிக்கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை..!

சிவசங்கரன்  நேற்று (24 ம் தேதி) இரவு சுமார் 12 மணியளவில் ராஜகுமாரி வீட்டுற்கு சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த மவுலியாவின் தலையில் அம்மிக்கல்லை(குழவி)தூக்கிப்போட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக முன்விரோதம் காரணமாகவும், குடும்பத்தகராறு, பழிவாங்கும் நோக்கத்தோடு கொலை, உள்ளிட்ட ஒரே மாதத்தில் தொடர் கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள்  நடைபெற்று உள்ளன. மேலும் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பெயரில் 20-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில், மேலும் ஒரு கொலை சம்பவம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்றுள்ளது.
 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பெண் தராததால் ஆத்திரம் அடைந்து குழவி கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை செய்யபட்டுள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மகள் மவுலிகா (18). முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி தஞ்சையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவரது உறவினரான திருக்களார் பொதியப்பன் மகன் சிவசங்கரன்(28) மவுலிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் தம்பிக்கோட்டை, ஜாம்புவான்னோடை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலைபார்த்து வந்த நிலையில் அவருக்கு பெண்தர மவுலியாவின் பெற்றோர் மறுத்துள்ளனர். 

திருவாரூர் : திருமணத்துக்கு பெண் தராததால் ஆத்திரம்.. அம்மிக்கல்லை தலையில் போட்டு மாணவி படுகொலை..!
இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரன்  நேற்று (24-ஆம் தேதி) இரவு சுமார் 12 மணியளவில் ராஜகுமாரி வீட்டுற்கு சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த மவுலியாவின் தலையில் அம்மிக்கல்லை(குழவி) தூக்கிப்போட்டுள்ளார். இதையடுத்து அவரது அலறல் சத்தம்கேட்டு எழுந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மவுலியாவை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் தப்பியோடி தம்பிக்கோட்டையில் பதுங்கி இருந்த சிவசங்கரனை மக்கள் பிடித்து முத்துப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 
 
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மவுலிகா உயிரிழந்தார். இதையடுத்து முத்துப்பேட்டை காவல் துறையினர் சிவசங்கரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி மவுலிகா உயிரிழந்ததற்கு காரணமான சிவசங்கரனுக்கு காவல்துறையினர் தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மவுலிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர் மேலும் ஒருதலை காதல் காரணமாக கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது மாணவர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் மேலும் கிராமங்கள்தோறும் ரோந்து பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு திருவாரூர் மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
Stalin vs Vaiko : நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
Car Sale: கோடை வெயிலில் கல்லா கட்டியது யார்? மாருதி Vs ஹுண்டாய் Vs மஹிந்த்ரா - எந்த கார் நம்பர் ஒன்? EV எப்படி?
கோடை வெயிலில் கல்லா கட்டியது யார்? மாருதி Vs ஹுண்டாய் Vs மஹிந்த்ரா - எந்த கார் நம்பர் ஒன்? EV எப்படி?
Trump:”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
Parandur Airport: பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
போலீஸ் ஸ்டேஷனையும் விட்டு வைக்காத தவெகவினர்.! தெறி பட பிஜிஎம் போட்டு ரீல்ஸ்- கதறும் காவலர்கள்
போலீஸ் ஸ்டேஷனையும் விட்டு வைக்காத தவெகவினர்.! தெறி பட பிஜிஎம் போட்டு ரீல்ஸ்- கதறும் காவலர்கள்
Embed widget