மேலும் அறிய

மூன்று திருமணம்.. வரிசையாக மோசடி.. போலீசாருக்கே தலைசுற்ற வைத்த கரூர் நபர்..!

கரூர் அருகே ஒருவர் பின் ஒருவராக பெற்றோர், சம்மதத்துடன் 3 திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத கருவூரில் தற்போது பரபரப்பு சம்பவம் நடந்ததை விரிவாகக் காணலாம். பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகள் ஜோதி முருகேஸ்வரி நேற்று முன்தினம் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை பெற்ற அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் புகாரை படித்துப் பார்த்த உடன் அவருக்கு தலையே சுற்றிவிட்டது.

என்ன புகார் என்று விரிவாக பார்த்தபோது. அந்த ஜோதி முருகேஸ்வரி கைப்பட எழுதிய புகார் கடிதத்தில் தனக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி அன்று கரூர் மாவட்டம், வெங்கமேடு விவிஜி நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலசுப்ரமணியன் என்பவருக்கும் எனக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நாங்கள் இல்லற வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.


மூன்று திருமணம்.. வரிசையாக மோசடி.. போலீசாருக்கே தலைசுற்ற வைத்த கரூர் நபர்..!

புகார் கொடுத்த முதல் மனைவி ஜோதி முருகேஸ்வரியிடன் பாலசுப்ரமணி புகைப்படம்

மேலும், கடந்த 2013-ஆம் ஆண்டு எங்கள் வாழ்வில் புதிய வரவாக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. மகிழ்ச்சியுடன் இருந்த நான் எனக்கு கடவுள் கொடுத்த மகிழ்ச்சி 3 மாதம் மட்டுமே . அதைத் தொடர்ந்து தான் எனது வாழ்வில் பேரிடி ஒன்று விழுந்தது . நான் எனது கைக்குழந்தையுடன் எனது மாமனார் இல்லமான வெங்கமேடு விவிஜி நகர் பகுதிக்கு மூன்று மாதம் கழித்து சென்றேன். பின்னர் அங்கு எனது கணவர் நித்தியா என்ற பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தேன். இதனை நான் எனது கணவரிடம் மற்றும் அவரது பெற்றோரிடம் கேட்டபோது, ‘அவன் அப்படித்தான் இருப்பான் என்று சொல்லி என்னை அடித்தும் துன்புறுத்தினர். பின்னர் நான் அங்கிருந்து எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். 


மூன்று திருமணம்.. வரிசையாக மோசடி.. போலீசாருக்கே தலைசுற்ற வைத்த கரூர் நபர்..!

இரண்டாவது திருமணம் செய்த நித்தியா என்ற பெண்ணுடன் பாலசுப்பிரமணி

அதன்பின்பு, எனக்கு தெரியாமலும், என்னிடம் விவாகரத்து பெறாமலும் ,எனது கணவர் பாலசுப்பிரமணி அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளின் உதவியுடன் கடந்த 2017 நவம்பர் மாதத்தில் நித்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் எனது காதுக்கு எட்டியது அது என்னவென்றால் என்னையும், 2-வது திருமணம் செய்த நித்தியாவையும், ஏமாற்றி மூன்றாவதாக சுதா என்ற பெண்ணை கடந்த 2020 ஜனவரி மாதம் 3-வது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்ததன் பேரில், நான் இதற்கு மேலும் மெளனம் சாதித்தால் இன்னும் பல்வேறு பெண்கள் வாழ்க்கையை எனது கணவர் சூறையாடுவது நிச்சயம் என தெரிந்து, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். என பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஜோதி முருகேஸ்வரி தகவல் அளித்தார்.


மூன்று திருமணம்.. வரிசையாக மோசடி.. போலீசாருக்கே தலைசுற்ற வைத்த கரூர் நபர்..!

மூன்றாவது திருமணம்

இந்த தலைசுற்றும் சம்பவத்தில் மனுவைப் பார்த்த அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர், இதற்காக சிறப்பு கவனம் செலுத்தி வெங்கமேடு விவிஜி நகர் பகுதியில் வசித்துவரும் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியான நித்யா ஆகியோர் பிடிபட்டனர். நேற்று இரவு அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கரூர் அருகே ஒருவர் பின் ஒருவராக பெற்றோர், சம்மதத்துடன் 3 திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் அட்டூழியம்
காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் அட்டூழியம்
தஞ்சாவூரில் பெரும் அதிர்ச்சி, பரபரப்பு: ரூ.3 லட்சம் மதிப்பு கஞ்சாவுடன் பிடிப்பட்ட 2 பேர்
தஞ்சாவூரில் பெரும் அதிர்ச்சி, பரபரப்பு: ரூ.3 லட்சம் மதிப்பு கஞ்சாவுடன் பிடிப்பட்ட 2 பேர்
ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் குஜராத் வியாபாரிகள் எஸ்கேப்... வலைவீசும் கோவை போலீசார்
ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் குஜராத் வியாபாரிகள் எஸ்கேப்... வலைவீசும் கோவை போலீசார்
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijaya Baskar : எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.? கை விட்டாரா விஜய்.??
எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.? கை விட்டாரா விஜய்.??
பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! யார் யாருக்கு கிடைக்கும்- விண்ணப்பிப்பது எப்படி.? வழிமுறை இதோ..
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
US-Iran டீலால் எரிபொருள் பிரச்னைக்கு விடிவு; ஹார்முஸை கடந்து இந்தியா வரும் 11 எண்ணெய் கப்பல்கள்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
CUET UG: க்யூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? டாப் மாணவர்கள் லிஸ்ட் இதோ!
US Iran Deal: ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
ஈரான் ஹேப்பி அண்ணாச்சி.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தை சக்சஸ்.! அமெரிக்கா கொடுத்த குட் நியூஸ்
Ather 450X Vs Honda Activa e: EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
EV சந்தையை கலக்கும் 2 டாப் ஸ்கூட்டர்கள்; ஏதர் 450X-ஆ.? ஹோண்டா ஆக்டிவா இ-ஆ.? சிறந்தது எது.? ஒப்பீடு
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
Embed widget