மேலும் அறிய

மூன்று திருமணம்.. வரிசையாக மோசடி.. போலீசாருக்கே தலைசுற்ற வைத்த கரூர் நபர்..!

கரூர் அருகே ஒருவர் பின் ஒருவராக பெற்றோர், சம்மதத்துடன் 3 திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத கருவூரில் தற்போது பரபரப்பு சம்பவம் நடந்ததை விரிவாகக் காணலாம். பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகள் ஜோதி முருகேஸ்வரி நேற்று முன்தினம் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரை பெற்ற அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் புகாரை படித்துப் பார்த்த உடன் அவருக்கு தலையே சுற்றிவிட்டது.

என்ன புகார் என்று விரிவாக பார்த்தபோது. அந்த ஜோதி முருகேஸ்வரி கைப்பட எழுதிய புகார் கடிதத்தில் தனக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி அன்று கரூர் மாவட்டம், வெங்கமேடு விவிஜி நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலசுப்ரமணியன் என்பவருக்கும் எனக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நாங்கள் இல்லற வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தோம்.


மூன்று திருமணம்.. வரிசையாக மோசடி.. போலீசாருக்கே தலைசுற்ற வைத்த கரூர் நபர்..!

புகார் கொடுத்த முதல் மனைவி ஜோதி முருகேஸ்வரியிடன் பாலசுப்ரமணி புகைப்படம்

மேலும், கடந்த 2013-ஆம் ஆண்டு எங்கள் வாழ்வில் புதிய வரவாக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. மகிழ்ச்சியுடன் இருந்த நான் எனக்கு கடவுள் கொடுத்த மகிழ்ச்சி 3 மாதம் மட்டுமே . அதைத் தொடர்ந்து தான் எனது வாழ்வில் பேரிடி ஒன்று விழுந்தது . நான் எனது கைக்குழந்தையுடன் எனது மாமனார் இல்லமான வெங்கமேடு விவிஜி நகர் பகுதிக்கு மூன்று மாதம் கழித்து சென்றேன். பின்னர் அங்கு எனது கணவர் நித்தியா என்ற பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டு இருப்பதை கண்டுபிடித்தேன். இதனை நான் எனது கணவரிடம் மற்றும் அவரது பெற்றோரிடம் கேட்டபோது, ‘அவன் அப்படித்தான் இருப்பான் என்று சொல்லி என்னை அடித்தும் துன்புறுத்தினர். பின்னர் நான் அங்கிருந்து எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டேன். 


மூன்று திருமணம்.. வரிசையாக மோசடி.. போலீசாருக்கே தலைசுற்ற வைத்த கரூர் நபர்..!

இரண்டாவது திருமணம் செய்த நித்தியா என்ற பெண்ணுடன் பாலசுப்பிரமணி

அதன்பின்பு, எனக்கு தெரியாமலும், என்னிடம் விவாகரத்து பெறாமலும் ,எனது கணவர் பாலசுப்பிரமணி அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளின் உதவியுடன் கடந்த 2017 நவம்பர் மாதத்தில் நித்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் எனது காதுக்கு எட்டியது அது என்னவென்றால் என்னையும், 2-வது திருமணம் செய்த நித்தியாவையும், ஏமாற்றி மூன்றாவதாக சுதா என்ற பெண்ணை கடந்த 2020 ஜனவரி மாதம் 3-வது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்ததன் பேரில், நான் இதற்கு மேலும் மெளனம் சாதித்தால் இன்னும் பல்வேறு பெண்கள் வாழ்க்கையை எனது கணவர் சூறையாடுவது நிச்சயம் என தெரிந்து, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். என பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியைச் சேர்ந்த ஜோதி முருகேஸ்வரி தகவல் அளித்தார்.


மூன்று திருமணம்.. வரிசையாக மோசடி.. போலீசாருக்கே தலைசுற்ற வைத்த கரூர் நபர்..!

மூன்றாவது திருமணம்

இந்த தலைசுற்றும் சம்பவத்தில் மனுவைப் பார்த்த அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர், இதற்காக சிறப்பு கவனம் செலுத்தி வெங்கமேடு விவிஜி நகர் பகுதியில் வசித்துவரும் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியான நித்யா ஆகியோர் பிடிபட்டனர். நேற்று இரவு அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கரூர் அருகே ஒருவர் பின் ஒருவராக பெற்றோர், சம்மதத்துடன் 3 திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" நான் இருக்கேன் பாத்துக்கிறேன் " பெண்ணிடம் வாட்ஸ் அப்பில் அத்துமீறிய போலீஸ் !! SP நடவடிக்கை
விவசாய நிலத் தகராறு ; கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை, கழுத்தறுப்பு – உறவினர்கள் வெறிச்செயல்
விவசாய நிலத் தகராறு ; கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை, கழுத்தறுப்பு – உறவினர்கள் வெறிச்செயல்
பெண்களின் பாதுகாப்பிற்காக ஒலித்த ஒற்றைக் குரல்! சீர்காழி நீதிமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்த வெள்ளியங்கிரி!
பெண்களின் பாதுகாப்பிற்காக ஒலித்த ஒற்றைக் குரல்! சீர்காழி நீதிமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்த வெள்ளியங்கிரி!
மதுரை: மகள் திருமணத்திற்காக சேமித்த 22 பவுன் நகை திருட்டு; தாய் கதறல்!
மதுரை: மகள் திருமணத்திற்காக சேமித்த 22 பவுன் நகை திருட்டு; தாய் கதறல்!

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
Iran-US Peace Talk: “US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
“US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
TN Debt Per Capita: தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
200 கி.மீட்டர் மைலேஜ்.. கவர்ந்து இழுக்கும் Raptee HV T30 இ பைக்! விலை எவ்ளோ?
200 கி.மீட்டர் மைலேஜ்.. கவர்ந்து இழுக்கும் Raptee HV T30 இ பைக்! விலை எவ்ளோ?
TN Govt White Paper: “தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
“தமிழகத்தின் கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி“ இன்று வெளியான வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
WagonR Flex Fuel: புதிய ஃபிளெக்ஸ் ஃபியூயல் WagonR வாங்குவது சிறந்ததா.? கவனமா முடிவெடுக்கணும்.! ஏன்னு சொல்றோம்..
புதிய ஃபிளெக்ஸ் ஃபியூயல் WagonR வாங்குவது சிறந்ததா.? கவனமா முடிவெடுக்கணும்.! ஏன்னு சொல்றோம்..
Upcoming SUVs 2026: SUV வாங்க பிளான் பண்றீங்களா.? அப்படியே ப்ரேக் போடுங்க.! 2 மாசத்துல 6 அட்டகாசமான கார்கள் வருது.!
SUV வாங்க பிளான் பண்றீங்களா.? அப்படியே ப்ரேக் போடுங்க.! 2 மாசத்துல 6 அட்டகாசமான கார்கள் வருது.!
C. Vijayabaskar Quits ADMK: “கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்“ C.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை
“கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன்“ C.விஜயபாஸ்கர் உருக்கமான அறிக்கை
Embed widget