மேலும் அறிய

POCSO | வாடகை வீடு.. வன்மம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த போலீஸ்காரர் மீது பாய்ந்தது போக்சோ

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தமைக்காக போலீஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தமைக்காக போலீஸ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் சங்கர்பல்லியில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.அவர்கள் வாழ்ந்து வந்த வீடு சேகர் வாடகைக்கு விட்டிருந்த வீடாகும். கான்ஸ்டபிளாக இருக்கும் சேகர், அவ்வப்போது சிறுமியிடம் ஏதாவது வலுக்கட்டாயமாக பேச்சு கொடுப்பதாக இருந்துள்ளார். சம்பவத்தன்று அதாவது கடந்த செவ்வாய்க் கிழமையன்று சேகர் சிறுமியின் வீட்டை நோட்டம் விட்டுள்ளார்.

இரவு நேரத்தில், சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாததை அவர் உறுதி செய்து கொண்டார். பின்னர் அவர் வீட்டுக்குள் நுழைந்து சிறுமியுடன் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வீட்டுக்குத் திரும்பிய சிறுமியின் தாயார், சேகரைப் பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் கூட, போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் சேகர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் 350 குழந்தைகள்!

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 350 குழந்தைகள் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். 2019 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 1,48,185 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரித்திருப்பது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்கு பள்ளியிலேயே பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அரசு இருக்கின்றது.

போக்ஸோ சட்டம் என்றால் என்ன?

போக்ஸோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போஸோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பதிவான குற்றங்களின் சதவீதம் 35.3. அதில் உத்தர பிரதேசத்தில் 30, மத்திய பிரதேசத்தில் 18, ஹரியானா, கர்நாடகாவில் தலா 11, தமிழ்நாட்டில் 8, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 6 சிறார் பாலியல் வல்லுறவு கொலை வழக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகள் தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை தங்களிடம் சொல்லும் அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக மாற வேண்டும். போக்ஸோ நீதிமன்றங்கள் வழக்குகளில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் குற்றங்களும் குறையும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
காதல் வலியாய் மாறிய வெறிச்செயல்… 16 வயது சிறுமி, பாட்டி படுகொலை...
காதல் வலியாய் மாறிய வெறிச்செயல்… 16 வயது சிறுமி, பாட்டி படுகொலை...
Crime: ”தந்தை சொன்ன அட்வைஸ்” துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த 21 வயது மகன் - மகள் கண்முன்னே கொடூரம்
Crime: ”தந்தை சொன்ன அட்வைஸ்” துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த 21 வயது மகன் - மகள் கண்முன்னே கொடூரம்
சிறுமியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு !! காதலன் செய்த வெறிச் செயல் !!
சிறுமியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு !! காதலன் செய்த வெறிச் செயல் !!
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
T20 World Cup 2026: இது தொடக்கம் இல்ல.. முடிவு..! ஓப்பனிங்கிலே குளோஸ் பண்ணும் அபிஷேக் - இஷான் ஜோடி!
T20 World Cup 2026: இது தொடக்கம் இல்ல.. முடிவு..! ஓப்பனிங்கிலே குளோஸ் பண்ணும் அபிஷேக் - இஷான் ஜோடி!
AIADMK Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
கல்வியில் சாதித்த தமிழ்நாடு: IIT, வெளிநாட்டு கனவுகளை நனவாக்கிய 2500+ அரசுப்பள்ளி மாணவர்கள்!
கல்வியில் சாதித்த தமிழ்நாடு: IIT, வெளிநாட்டு கனவுகளை நனவாக்கிய 2500+ அரசுப்பள்ளி மாணவர்கள்!
திமுக ஆட்சியிலும் CM.. அதிமுக ஆட்சியிலும் CM - யார் அந்த முதலமைச்சர்?
திமுக ஆட்சியிலும் CM.. அதிமுக ஆட்சியிலும் CM - யார் அந்த முதலமைச்சர்?
Womens T20 WC Schedule: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: முழு அட்டவணை வெளியீடு - இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எப்போது?
Womens T20 WC Schedule: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: முழு அட்டவணை வெளியீடு - இந்தியா vs பாகிஸ்தான் மோதல் எப்போது?
Embed widget