மேலும் அறிய

Crime | குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரம்.. மகன் கண்முன்னே தாயை கொன்ற கொடூர தந்தை..

சென்னை, திருவொற்றியூரில் தரக்குறைவாக திட்டியதால் மகன் கண்முன்னே தாயை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் அருண். இவர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கப்பலில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை தளபதி. (வயது 52) தாய் சண்முகப்பிரியா ( 49). அருண் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தனது வீட்டில் இருந்து தனது தாயின் அலறல் சத்தம் வருவதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியில் உடனே வீட்டிற்குள் ஓடியுள்ளார்.

அங்கே, தனது தாய் சண்முகப்பிரியாவை தனது தந்தை தளபதி கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கிக்கொண்டிருந்தார். தனது மகனை கண்ட தந்தை தளபதி உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, உடனே தனது தாய் சண்முகப்பிரியாவை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அருணின் தந்தை தளபதியை கைது செய்தனர்.


Crime | குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரம்.. மகன் கண்முன்னே தாயை கொன்ற கொடூர தந்தை..

கைது செய்யப்பட்ட தளபதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “எனக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் மதுவிற்கு அடிமையாக இருந்தேன். இதனால், எனது மனைவி என்னிடம் சண்டையிட்டுக்கொண்டு என்னைவிட்டு பிரிந்து அவளது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாள். கடந்த 4 மாதமாகத்தான் என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தாள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் மனைவியிடம் சாப்பாடு போடுமாறு கேட்டேன். அதற்கு அவள், ‘வேலைக்கு போகாமல் இருக்கும் உனக்கு சாப்பாடு எல்லாம் ஒரு கேடா?’ என்று தரக்குறைவாக பேசினாள். இதனால், எனக்கு கோபம் வந்தது. பின்னர், எனது மனைவி கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்கு சென்றேன். அங்கே இருந்த எனது மனைவியை பார்த்த எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.


Crime | குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரம்.. மகன் கண்முன்னே தாயை கொன்ற கொடூர தந்தை..

இதனால், அங்கே இருந்த கத்தியை எடுத்து எனது மனைவி சண்முகப்பிரியாவின் மார்பில் சரமாரியாக குத்தினேன். அப்போது, எனது மகன் என் கையில் இருந்த கத்தியை தட்டிவிட்டு என்னை தடுத்தான். நான் பயந்து சுனாமி குடியிருப்புக்குள் சென்று பதுங்கியிருந்தேன். ஆனால், என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.”

இவ்வாறு அவர் கூறினார். மீனவரான தளபதி கப்பலில் ஊழியராக பணியாற்றி வந்தவர். மகன் கண்முகன்னே தாயை தந்தையே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க :முகம் தெரியல.. தழும்பு தெரியுது! ஆபாச தளத்தில் காதலியுடன் இருந்த அந்தரங்க வீடியோ! இளைஞர் ஷாக்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget