மேலும் அறிய

Crime | குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரம்.. மகன் கண்முன்னே தாயை கொன்ற கொடூர தந்தை..

சென்னை, திருவொற்றியூரில் தரக்குறைவாக திட்டியதால் மகன் கண்முன்னே தாயை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் அருண். இவர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கப்பலில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை தளபதி. (வயது 52) தாய் சண்முகப்பிரியா ( 49). அருண் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தனது வீட்டில் இருந்து தனது தாயின் அலறல் சத்தம் வருவதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியில் உடனே வீட்டிற்குள் ஓடியுள்ளார்.

அங்கே, தனது தாய் சண்முகப்பிரியாவை தனது தந்தை தளபதி கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கிக்கொண்டிருந்தார். தனது மகனை கண்ட தந்தை தளபதி உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, உடனே தனது தாய் சண்முகப்பிரியாவை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அருணின் தந்தை தளபதியை கைது செய்தனர்.


Crime | குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரம்.. மகன் கண்முன்னே தாயை கொன்ற கொடூர தந்தை..

கைது செய்யப்பட்ட தளபதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “எனக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் மதுவிற்கு அடிமையாக இருந்தேன். இதனால், எனது மனைவி என்னிடம் சண்டையிட்டுக்கொண்டு என்னைவிட்டு பிரிந்து அவளது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாள். கடந்த 4 மாதமாகத்தான் என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தாள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் மனைவியிடம் சாப்பாடு போடுமாறு கேட்டேன். அதற்கு அவள், ‘வேலைக்கு போகாமல் இருக்கும் உனக்கு சாப்பாடு எல்லாம் ஒரு கேடா?’ என்று தரக்குறைவாக பேசினாள். இதனால், எனக்கு கோபம் வந்தது. பின்னர், எனது மனைவி கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்கு சென்றேன். அங்கே இருந்த எனது மனைவியை பார்த்த எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.


Crime | குடிப்பழக்கத்தை கண்டித்ததால் ஆத்திரம்.. மகன் கண்முன்னே தாயை கொன்ற கொடூர தந்தை..

இதனால், அங்கே இருந்த கத்தியை எடுத்து எனது மனைவி சண்முகப்பிரியாவின் மார்பில் சரமாரியாக குத்தினேன். அப்போது, எனது மகன் என் கையில் இருந்த கத்தியை தட்டிவிட்டு என்னை தடுத்தான். நான் பயந்து சுனாமி குடியிருப்புக்குள் சென்று பதுங்கியிருந்தேன். ஆனால், என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.”

இவ்வாறு அவர் கூறினார். மீனவரான தளபதி கப்பலில் ஊழியராக பணியாற்றி வந்தவர். மகன் கண்முகன்னே தாயை தந்தையே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க :முகம் தெரியல.. தழும்பு தெரியுது! ஆபாச தளத்தில் காதலியுடன் இருந்த அந்தரங்க வீடியோ! இளைஞர் ஷாக்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget