மேலும் அறிய

மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பிளம்பர் - ஆத்திரமடைந்த கணவர் செய்த செயல்

சென்னையில் நிகழ்ந்த பல்வேறு குற்ற சம்பவங்களை கீழே காணலாம்.

மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பிளம்பர் - மது வாங்கி கொடுத்து கொலை செய்த கணவர்

சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அன்பு கணபதி ( வயது 28 ) பிளம்பர். இவருக்கும் , அதே பகுதியை சேர்ந்த ராஜ துரை ( வயது 30 ) என்ற ஆட்டோ ஓட்டுநரின் மனைவி மதுவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. நேற்று முன்தினம், இரு தரப்பு குடும்பத்தினர் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதில் இனிமேல் மதுவுடன் பேசக் கூடாது என்று அன்பு கணபதியை கண்டித்து அனுப்பியுள்ளனர்.

அனைவரும் கலைந்து சென்ற நிலையில் , ராஜதுரை வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவி மதுவுடன் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மது வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் அன்பு கணபதி தான் அவரை தீர்த் துக் கட்டவேண்டும் என ராஜதுரை திட்டமிட்டுள்ளார். நடந்த அனைத்தையும் மறந்து விட்டேன் ,  மது அருந்தலாம் என அன்பு கணபதியை ராஜதுரை அன்பாக பேசி அழைத்து சென்றுள்ளார்.

பெருங்குடி ரயில் நிலையம் அருகே , இருவரும் அமர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் , கள்ளத் தொடர்பு தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ துரை , மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அன்புகணபதியின் கழுத்து , மார்பு பகுதியில் சரமாரியாக குத்தி விட்டு தப்பியுள்ளார்.

பலத்த காயத்துடன் ஓடிய அன்பு கணபதியை , உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது , வழியிலேயே அவர் உயிரிழந்தார். வழக்கு பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார் , உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதே காவல் நிலையத்தில் சரண் அடைந்த ராஜதுரையிடம் போலீசார் விசாரிக்கின்றனர். 

திடீரென வலிப்பு ஏற்பட்டு , பெரும் விபத்தை ஏற்படுத்தி அரசு மருத்துவர் கைது

சென்னை திருவேற்காடு ஈஸ்வரன் நகர் ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் அறிவரசன் ( வயது 41 ) இவரது மனைவி சரண்யா ( வயது 36 ) கடந்த 28 - ம் தேதி , அறிவரசன் டி.வி. எஸ்., ஸ்கூட்டியில் மனைவியுடன் , ஆவடி - பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆவடி, வசந்தம் நகர் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த கார் , ஸ்கூட்டி மற்றும் சாலை யோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அறிவரசன், சரண்யா தம்பதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ஆவடி பல்லவன் நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாரி மார்க்ஸ் ( வயது 46 ) காயமடைந்தார். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், சோராஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் இவர், காரை வேகமாக ஓட்டிச் சென்ற போது திடீரென வலிப்பு ஏற்பட்டு விபத்து நடந்தது தெரிய வந்தது. பாரி மார்க்ஸ் சிகிச்சை முடிந்து, தற்போது நலமாக உள்ளார். இதையடுத்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அதிவேகமாக கார் ஓட்டுதல், அலட்சியமாக வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சந்திரபாடி முகத்துவாரத்தில் மணல் கடத்தல்: டிரைவர் ஜெயிலில் அடைப்பு.. தலைமறைவான லாரி ஓனருக்கு போலீஸ் வலைவீச்சு!
சந்திரபாடி முகத்துவாரத்தில் மணல் கடத்தல்: டிரைவர் ஜெயிலில் அடைப்பு.. தலைமறைவான லாரி ஓனருக்கு போலீஸ் வலைவீச்சு!
மதுப்பிரியர்களிடம் ஆட்டைய போட்ட 10 ரூபாய்! டாஸ்மாக் ஊழியர்கள் இருவரை தட்டி தூக்கிய போலீசார்..!
மதுப்பிரியர்களிடம் ஆட்டைய போட்ட 10 ரூபாய்! டாஸ்மாக் ஊழியர்கள் இருவரை தட்டி தூக்கிய போலீசார்..!
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல் !
மதுரை மாநகராட்சி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் – 28 கடைகள் சீல் !
கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
கள்ளக் காதல் விவகாரம் ; நள்ளிரவில் மனைவியுடன் உல்லாசமாக இருந்த டிரைவர் அடித்துக் கொலை !!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
Embed widget