மேலும் அறிய

குட்கா வியாபாரத்தில் பிரச்சனை, சேலத்தில் கடத்தப்பட்ட இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு பெங்களூரில் மீட்பு.

தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாராம் (52). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், சேலம் சின்னக்கடை வீதியில் கடந்த 3 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22). கடந்த 2 ஆம் தேதி காலை ஜெயராம் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். காலை 6.45 மணி அளவில் திடீரென அந்த 4 பேரும் ஜெயராமின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, தயாராக இருந்த காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவலின் பேரில் டவுன் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தது. குட்கா கடத்தல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது, வாலிபர் ஜெயராமை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள், சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர்.

குட்கா வியாபாரத்தில் பிரச்சனை, சேலத்தில் கடத்தப்பட்ட இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு பெங்களூரில் மீட்பு.

குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாப்பேட்டை காவல்துறையினர் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். அவருடன் சுரேஷ், ஷாவலராம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. 3 பேரும் தலா 75 ஆயிரம் நிவாரண நிதியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியது. அதன்படி பணத்தை செலுத்திய பிறகு ஜாமீனில் வெளியே வந்தனர். இதன்பிறகு ஆத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். இதில் ஷாவலராம் பெங்களூரில் இருந்து ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செங்கோடு காவல்துறையினர் லாரியுடன் மடக்கி பிடித்தனர். 

இதில் ஷாவலராம் உள்பட 2 பேரை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த இவர், கடந்த 20 நாளாக காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். ஆனால் நேற்று முன்தினம் கையெழுத்து போட வில்லை. எனவே இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இவர்கள் இருவரும் ஒன்றாக குட்கா கடத்தல் தொழில் செய்து வந்திருக்கலாம் எனவும் இதில் பணம் கொடுத்தல் வாங்கலில் இந்த கடத்தல் நடந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் லாரி காவல்துறையினரிடம் பிடிபட்டதால் லாரியின் உரிமையாள ரான சுரேஷ், அதற்கான நஷ்டஈடு கேட்டு ஜெயராம், ஷாவலராம் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் எனவும் இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

குட்கா வியாபாரத்தில் பிரச்சனை, சேலத்தில் கடத்தப்பட்ட இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு பெங்களூரில் மீட்பு.

ஆனால் அவரது தந்தை மூலாராம் நடந்தது என்ன? என்பதை தெரிவிக்க மறுத்து வந்தார். எனவே போலீசார் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையில் மர்ம நபர்கள் ஜெயராமை பெங்களூருக்கு கடத்திச் சென்றிருப்பதும் தெரிவித்தது. காவல்துறையினர் நெருக்கடி காரணமாக ஜெயராமை கடத்தல் கும்பல் பெங்களூர் - மங்களூர் சாலையில் விட்டுச் சென்றது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர் ஜெயராமை அங்கிருந்து மீட்டு சேலம் திரும்பினர். தலைமறைவாக உள்ள கடத்தல் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget