மேலும் அறிய

Crime: வீடு புகுந்த மர்மநபர்கள்..! மனைவி முகத்தில் மிளகாய்பொடி வீசி கணவன் கடத்தல்..! தி.மலையில் பரபரப்பு...

தச்சம்பட்டு அருகே தம்பதி முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்த கும்பல் அவரது கணவரை கை, கால்களை கட்டி வைத்து காரில் கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள அள்ளிக்கொண்டாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் வயது (39), இவர் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி வயது (32). இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி ஆகிய இருவரும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது பகல் 3 மணி அளவில் 4 நபர்கள் கொண்ட கும்பல் அந்தோணிராஜின் வீட்டுக்குள் திடீரென புகுந்துள்ளனர். திடீரென வந்த கும்பல் வேகத்திலேயே கணவன்-மனைவி இருவரின் முகத்திலும் மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி உள்ளனர். அதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள் உமாமகேஸ்வரியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அதன் பிறகு அந்தோணிராஜின் கை, கால்களையும் கட்டிய மர்ம நபர்கள் அந்தோணிராஜியை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் 4 நபர்களும் அந்தோணிராஜை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்தனர்.


Crime: வீடு புகுந்த மர்மநபர்கள்..! மனைவி முகத்தில் மிளகாய்பொடி வீசி கணவன் கடத்தல்..! தி.மலையில் பரபரப்பு...

 

பின்னர் அந்த மர்ம நபர்கள் அந்தோணிராஜியின் மனைவி உமாமகேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து புகார் நீ செய்தால் உன் கணவரை கொன்று விடுவோம் என மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அதனை பொற்படுத்தாமல் உமாமகேஸ்வரி தச்சம்பட்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து அந்தோணி ராஜை கடத்தியவர்களை காவல்துறையினர் தனிப்பட்டை அமைத்து தேடினர். 

 


Crime: வீடு புகுந்த மர்மநபர்கள்..! மனைவி முகத்தில் மிளகாய்பொடி வீசி கணவன் கடத்தல்..! தி.மலையில் பரபரப்பு...

அதன் பிறகு காவல்துறையினர் அந்தோணிராஜ் வீட்டில் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியகங்களை பறிமுதல் செய்தும், அந்தோணி ராஜிக்கு முன்விரோதம் உடையவர்கள் உள்ளார்களா என காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்தோணிராஜை கடத்தி சென்றது திருப்பத்தூர் நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் வயது (34), ஜெய் என்ற ஜெகதீசன் வயது (36) மற்றும் சசிகுமார் வயது (20), முனிராஜ் வயது (40) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்தோணிராஜை காவல்துறையினர் மீட்டு 4 நபர்களையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 நபர்களிடம் காவல்துறையினர் எதற்காக அந்தோணிராஜை கடத்தி சென்றனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்திற்காக வீடு புகுந்து நகை மதிப்பீட்டாளரை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

தலைப்பு செய்திகள்

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget