மேலும் அறிய

Uttar Pradesh: விளையாடிக்கொண்டிருந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை! உபியில் கொடூரம்!

Uttar Pradesh; உத்தரப் பிரதேசத்தில் நான்கு வயது குழந்தை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறது.

Uttar Pradesh; உத்தரப் பிரதேசத்தில் நான்கு வயது குழந்தை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறது. 

நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தினமும் நாட்டில் எங்கேனும் ஒரு பகுதியில் நடந்த வண்ணம் இருக்கின்றது. இதில் நேற்று நடந்திருக்கும் சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கின்றது. 

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் உள்ள பாந்தா மாவட்டத்தில் நான்கு வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. பாந்தா மாவட்டம் நரைனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட நான்கு வயது குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தையினை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  ஃபரித் என்பவரை, நரைனி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை, வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையை கடத்தி செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காவல் துறைக்கு இந்த கொடூர சம்பவம் தெரிய வர, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஃபரித் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்டுள்ள ஃபரித் மீது காவல் துறையினர், உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகமாகி வருகின்றது. கடந்த 2020 ஆண்டு கண்க்குப் படி நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகப்படியான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளி விபரங்களின் படி, 5,310 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதனை அடுத்து, 2,769 பதிவு செய்யப்பட்ட குற்றங்களோடு உத்திர பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் 389 பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்களோடு தமிழ்நாடு 20வது இடத்தில் உள்ளது எனும் உண்மை கவலை அளிப்பதாக உள்ளது.   


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget