மேலும் அறிய

’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

’’என் பணம் 3 லட்சம் ரூபாய் என்னவானது என்று அவர் புலம்ப, அவரை கைத்தாங்கலாக அழைத்துகொண்டு வெளியே வந்தனர்’’

மயிலாடுதுறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் 66 வயதான புருஷோத்தமன் என்பவர் தனியாக 3 லட்சம் ரூபாய்க்கு வீட்டை குத்தகைக்கு எடுத்து கடந்த 7 ஆண்டுகளாக குடி இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டின் மீது கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் கடனை திருப்பி கட்டாததால் நிதி நிறுவனத்தினர் நீதிமன்றம் மூலம் அந்த வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளனர். 


’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

இந்த சூழலில் நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, கடனை திரும்பச் செலுத்தமுடியாத வீட்டின் உரிமையாளர், நிதி நிறுவனத்தினரிடம் எனது வீட்டை ஜப்தி செய்துகொள்ளுங்கள் என தெரிவித்துவிட்டு சென்ற அவர். முதல் மாடியில் குத்தகைக்கு ஒருவர் குடியிருப்பதையும் அவருக்கு பணம் தரப்படவேண்டும் என்ற தகவலையும் வீட்டை ஜப்தி செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர்களிடம் சொல்லவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்ற நிதி நிறுவனத்தினர், முதல் தளத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள புருஷோத்தமன்  தூங்கிகொண்டிருந்ததை அறியாமல் வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர். 


’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவரது மகன் சதீஷ் தனது தந்தை மாடியில் உள்ள நிலையில் வீட்டை சீல் வைத்துவிட்டனர் என்று  கூறியுள்ளார்.  இதையடுத்து தகவல் அறிந்து அங்கு  மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் சென்று பார்த்தபோது, மாடியில் புருஷோத்தமன் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு உணவு வழங்கப்பட்டது, நிதி நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு இது நீதிமன்ற நடவடிக்கை என்றும் மாடியில் ஆள் இருந்தது தெரியாது என்றனர். உடனடியாக அவரை மீட்கவேண்டும் என்று போலீசார் கேட்டதும், நாகை நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனத்தினர் மயிலாடுதுறை சென்று மாடி பகுதிக்குச் செல்லும் கேட்டின் சீலை நீக்கி முதியவரை மாடியிலிருந்து அழைத்தனர், அப்போது என் பணம் 3 லட்சம் ரூபாய் என்னவானது என்று அவர் புலம்ப, அவரை கைத்தாங்கலாக அழைத்துகொண்டு வெளியே வந்தனர்.


’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

 Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தொடர்ந்து அனைவரையும் மயிலாடுதுறை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர், தனியார் நிதி நிறுவனத்தினர் கூறுகையில், இந்த வீடு ஜப்தி செய்து ஏலம் முடிந்ததும் புருஷோத்தமன் தொகை கிடைக்க  வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துச்சென்றனர். முதியவரை வீட்டிக்குள் வைத்து பூட்டி நிதி நிறுவனத்தினர் சீல் வைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொழந்தைகளா தயவு செஞ்சு பேஸ்புக் யூஸ் பண்ணாதீங்க’ - வீடியோ வெளியிட்ட போலீஸ் எஸ்.பி

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... செல்போன் ஆக்கிரமிப்பு காலத்திலும் அசத்தும் கிராம மக்களின் சரித்திர நாடகம்
200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... செல்போன் ஆக்கிரமிப்பு காலத்திலும் அசத்தும் கிராம மக்களின் சரித்திர நாடகம்
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Embed widget