மேலும் அறிய

’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

’’என் பணம் 3 லட்சம் ரூபாய் என்னவானது என்று அவர் புலம்ப, அவரை கைத்தாங்கலாக அழைத்துகொண்டு வெளியே வந்தனர்’’

மயிலாடுதுறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் 66 வயதான புருஷோத்தமன் என்பவர் தனியாக 3 லட்சம் ரூபாய்க்கு வீட்டை குத்தகைக்கு எடுத்து கடந்த 7 ஆண்டுகளாக குடி இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டின் மீது கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் கடனை திருப்பி கட்டாததால் நிதி நிறுவனத்தினர் நீதிமன்றம் மூலம் அந்த வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளனர். 


’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

இந்த சூழலில் நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, கடனை திரும்பச் செலுத்தமுடியாத வீட்டின் உரிமையாளர், நிதி நிறுவனத்தினரிடம் எனது வீட்டை ஜப்தி செய்துகொள்ளுங்கள் என தெரிவித்துவிட்டு சென்ற அவர். முதல் மாடியில் குத்தகைக்கு ஒருவர் குடியிருப்பதையும் அவருக்கு பணம் தரப்படவேண்டும் என்ற தகவலையும் வீட்டை ஜப்தி செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர்களிடம் சொல்லவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்ற நிதி நிறுவனத்தினர், முதல் தளத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள புருஷோத்தமன்  தூங்கிகொண்டிருந்ததை அறியாமல் வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர். 


’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவரது மகன் சதீஷ் தனது தந்தை மாடியில் உள்ள நிலையில் வீட்டை சீல் வைத்துவிட்டனர் என்று  கூறியுள்ளார்.  இதையடுத்து தகவல் அறிந்து அங்கு  மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் சென்று பார்த்தபோது, மாடியில் புருஷோத்தமன் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு உணவு வழங்கப்பட்டது, நிதி நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு இது நீதிமன்ற நடவடிக்கை என்றும் மாடியில் ஆள் இருந்தது தெரியாது என்றனர். உடனடியாக அவரை மீட்கவேண்டும் என்று போலீசார் கேட்டதும், நாகை நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனத்தினர் மயிலாடுதுறை சென்று மாடி பகுதிக்குச் செல்லும் கேட்டின் சீலை நீக்கி முதியவரை மாடியிலிருந்து அழைத்தனர், அப்போது என் பணம் 3 லட்சம் ரூபாய் என்னவானது என்று அவர் புலம்ப, அவரை கைத்தாங்கலாக அழைத்துகொண்டு வெளியே வந்தனர்.


’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

 Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தொடர்ந்து அனைவரையும் மயிலாடுதுறை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர், தனியார் நிதி நிறுவனத்தினர் கூறுகையில், இந்த வீடு ஜப்தி செய்து ஏலம் முடிந்ததும் புருஷோத்தமன் தொகை கிடைக்க  வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துச்சென்றனர். முதியவரை வீட்டிக்குள் வைத்து பூட்டி நிதி நிறுவனத்தினர் சீல் வைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொழந்தைகளா தயவு செஞ்சு பேஸ்புக் யூஸ் பண்ணாதீங்க’ - வீடியோ வெளியிட்ட போலீஸ் எஸ்.பி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Must Visit Temples: தென்னிந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 திருத்தலங்கள் - லிஸ்ட் இதோ, உங்க ஃபேவரட் எது?
Embed widget