மேலும் அறிய

’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

’’என் பணம் 3 லட்சம் ரூபாய் என்னவானது என்று அவர் புலம்ப, அவரை கைத்தாங்கலாக அழைத்துகொண்டு வெளியே வந்தனர்’’

மயிலாடுதுறை காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் 66 வயதான புருஷோத்தமன் என்பவர் தனியாக 3 லட்சம் ரூபாய்க்கு வீட்டை குத்தகைக்கு எடுத்து கடந்த 7 ஆண்டுகளாக குடி இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டின் மீது கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் கடனை திருப்பி கட்டாததால் நிதி நிறுவனத்தினர் நீதிமன்றம் மூலம் அந்த வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதி பெற்றுள்ளனர். 


’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

இந்த சூழலில் நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து, கடனை திரும்பச் செலுத்தமுடியாத வீட்டின் உரிமையாளர், நிதி நிறுவனத்தினரிடம் எனது வீட்டை ஜப்தி செய்துகொள்ளுங்கள் என தெரிவித்துவிட்டு சென்ற அவர். முதல் மாடியில் குத்தகைக்கு ஒருவர் குடியிருப்பதையும் அவருக்கு பணம் தரப்படவேண்டும் என்ற தகவலையும் வீட்டை ஜப்தி செய்ய வந்த நிதி நிறுவன ஊழியர்களிடம் சொல்லவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்ற நிதி நிறுவனத்தினர், முதல் தளத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ள புருஷோத்தமன்  தூங்கிகொண்டிருந்ததை அறியாமல் வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர். 


’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

இந்நிலையில் வீட்டுக்கு வந்த அவரது மகன் சதீஷ் தனது தந்தை மாடியில் உள்ள நிலையில் வீட்டை சீல் வைத்துவிட்டனர் என்று  கூறியுள்ளார்.  இதையடுத்து தகவல் அறிந்து அங்கு  மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீசார் சென்று பார்த்தபோது, மாடியில் புருஷோத்தமன் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு உணவு வழங்கப்பட்டது, நிதி நிறுவனத்தினரிடம் கேட்டதற்கு இது நீதிமன்ற நடவடிக்கை என்றும் மாடியில் ஆள் இருந்தது தெரியாது என்றனர். உடனடியாக அவரை மீட்கவேண்டும் என்று போலீசார் கேட்டதும், நாகை நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனத்தினர் மயிலாடுதுறை சென்று மாடி பகுதிக்குச் செல்லும் கேட்டின் சீலை நீக்கி முதியவரை மாடியிலிருந்து அழைத்தனர், அப்போது என் பணம் 3 லட்சம் ரூபாய் என்னவானது என்று அவர் புலம்ப, அவரை கைத்தாங்கலாக அழைத்துகொண்டு வெளியே வந்தனர்.


’உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா’- முதியவரை வீட்டில் பூட்டி சீல் வைத்த நிதிநிறுவனம்

 Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தொடர்ந்து அனைவரையும் மயிலாடுதுறை போலீசார் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர், தனியார் நிதி நிறுவனத்தினர் கூறுகையில், இந்த வீடு ஜப்தி செய்து ஏலம் முடிந்ததும் புருஷோத்தமன் தொகை கிடைக்க  வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துச்சென்றனர். முதியவரை வீட்டிக்குள் வைத்து பூட்டி நிதி நிறுவனத்தினர் சீல் வைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொழந்தைகளா தயவு செஞ்சு பேஸ்புக் யூஸ் பண்ணாதீங்க’ - வீடியோ வெளியிட்ட போலீஸ் எஸ்.பி

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget