மேலும் அறிய

'எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

’’ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் பூசாரி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது’’

குணசேகரன் என்ற நபர், ராமநாதபுரம் மாவட்டம் நைனார் கோவில் சாலை அருகே உள்ள தொன்னை குருசாமி கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதான மகள் ஒருவர் உள்ள நிலையில், குணசேகரன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சில நேரங்களில் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.  பெற்ற தந்தையே இப்படி செய்வதை நினைத்து  மனவேதனை அடைந்த சிறுமியின் தாய், இது குறித்து காவல் நிலையத்தில் தெரிவிக்கவில்லை. மாறாக, சிவக்குமார் என்ற பூசாரி ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். இந்த பூசாரி, சூரங்கோட்டை காலணி அருகே உள்ள கொட்டகை கிராமத்தை சேர்ந்தவர். சிறுமியின் தாயார், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அந்த பூசாரியிடம் கூறியுள்ளார்.


எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இதனையடுத்து, பூசாரி உங்கள் மகளை என்னிடம் அழைத்து வந்து எனது வீட்டில் தங்க வைக்குமாறும், பூஜைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி தாய் தன் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பூசாரி, இனிமேல் உங்கள் கணவரிடம் இருந்து சிறுமியை பாதுகாப்பது என் கடமை என ஆசைவார்த்தை தெரிவித்துள்ளார். இதை நம்பிய சிறுமியின் தாய், சிறுமியை அழைத்து வந்து அவரின் வீட்டில் ஒரு நாள் தங்கியுள்ளனர். இதைப் பயன்படுத்திய பூசாரி சிவக்குமார் சிறுமியை இரவில் பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது தாயாரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியின் தந்தை குணசேகரன், பூசாரி சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இந்த கொடுமையான சம்பவம் குறித்து நாம் காவல்துறையினரிடம் விசாரித்தோம்', அவர்கள்  நம்மிடம் கூறுகையில், ராமநாதபுரம் அடுத்த நைனார் கோவில் சாலை அருகே உள்ள தொன்னை குருசாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய 16 வயது மகளான சிறுமியை பாலியல் ரீதியாக தந்தையே துன்புறுத்தல் செய்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சூரங்கோட்டை காலனி அருகே உள்ள கொட்டகை கிராமத்தில் பூசாரி சிவக்குமார் என்பவரை சிறுமியின் தாயார் சந்தித்து தனது மகளுக்கு நேர்ந்த கொடுமையை விளக்கமாக தெரிவித்துள்ளார்,

இது தொடர்பாக பூசாரி சிவகுமார் தாயிடம் மகளை என்னிடம் அழைத்து வந்து எனது வீட்டில் தங்க வைக்குமாறும், பூஜைகள் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதனை நம்பி தாய் தன் மகளை பூசாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இனிமேல் அவரிடமிருந்து பாதுகாப்பது என் கடமை என ஆசைவார்த்தை தெரிவித்ததால் இதை நம்பி சிறுமியை தாய் அழைத்து வந்து அவரின் வீட்டில் ஒரு நாள் தங்கியுள்ளனர், இதை பயன்படுத்திய பூசாரி சிவக்குமார் சிறுமியை இரவில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி சிறுமி தாயாரிடம் தெரிவித்த பொழுது, அதிர்ச்சியடைந்த தாய் ராமநாதபுரம் பஜார் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.


எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

இதை தொடர்ந்து பூசாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக சிறுமியிடம் நாங்கள்  விசாரணை நடத்தியதில், சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் போலீசார் சிறுமியின் தந்தை குணசேகரன், பூசாரி சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிறுமி ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், இருவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget