மேலும் அறிய

Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

பணத்தை வாங்காமல் போக மாட்டேன் என காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டுள்ள சிவகாசி ஜெயலட்சுமியை பார்க்கவே தனிக்கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. அவர்களை கட்டுப்படுத்துவதே போலீசாருக்கு பெரிய தலைவலியாகிவிட்டது.

சிவகாசி ஜெயலட்சுமி ஏமாற்றப்பட்டார். ‛என்னது... சிவகாசி ஜெயலட்சுமி ஏமாற்றப்பட்டாரா...’ செய்தியில் ஏதோ தவறு... என கடந்து போய்விடாதீர்கள். உண்மை தான். ஒட்டுமொத்த காவல்துறையையும் ஏமாற்றி ஏப்பமிட்ட அதே சிவகாசி ஜெயலட்சுமி தான், தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என நீண்ட நாட்களுக்கு பின்.... இல்லை இல்லை... ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்துள்ளார். 



Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

ஏட்டு முதல் எஸ்.பி.., வரை 8 பாலியல் புகார்களை கூறி ஒரு காலத்தில் ஒட்டுமொத்த காவல்துறையையும் கதற வைத்தவர் சிவகாசி ஜெயலட்சுமி. போலீஸ் கெட்டப்பில் பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக சிறை சென்று விடுதலையானதெல்லாம் வேறு கதை. ஏமாற்றினார், மோசடி செய்தார் என்றெல்லாம் சிவகாசி ஜெயலட்சிமியை 2011ல் பரபரப்பாக பேசப்பட்ட ஜெயலட்சுமி, இப்போது 10 ஆண்டுகள் கழித்து ‛கம் பேக்’ ஆகியிருக்கிறார். ஆம்... ஜெயலட்சுமி ரிட்டன். இம்முறை, அவர் யாரையும் ஏமாற்றவில்லை; தான் ஏமாற்றப்பட்டதாக முறையிட்டுள்ளார். திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்பின் நிதி நிறுவனம் மீது புகார் வருவதும், விசாரணை நடைபெறுவதும் புதிதல்ல.


Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

இந்நிலையில் நேற்று சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்தார் ஜெயலட்சுமி, 3 கோடியே 75 லட்சம் ரூபாய் எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும், பணம் திருப்பித் தரவில்லை என்றும் அவர் கூறினார். நீண்ட நேரம் இரவு வரை காத்திருந்த ஜெயலட்சுமி, நிறுவன முகப்பிலேயே அமர்ந்திருந்தார். தகவலறிந்து வந்த போலீசார், அவரை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இன்று காலை மீண்டும் அங்கு வந்த ஜெயலட்சுமி, எல்பின் நிறுவனம் முன்பு நாற்காலியில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 



Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

700-க்கும் மேற்பட்டோருடைய பணம் அது என்றும், அவர்களுக்கு தான் பதில் சொல்ல முடியவில்லை என்றும், சம்மந்தப்பட்ட பணத்தை தந்தால் தான் திரும்பிச் செல்வேன் என்றும் கூறி அங்கேயே அமர்ந்தார். மிதுன் சமேஷ் என்பவரும் அதே புகாரில் பணத்தை கேட்டு புகார் அளித்தார். எல்பின் நிறுவனத்திற்கு மோசடி புகார் புதில்ல என்றாலும், சிவகாசி ஜெயலட்சுமி நேரடியாக வந்த புகார் அளிப்பார் என்று யாரும் எதிர்பார்க்காதது. அதுவும் அங்கு புகார் அளிக்க வருவோரை போலீசார் எளிதில் எதிர்கொண்டு பேசுவார்கள். ஆனால் சிவகாசி ஜெயலட்சுமியிடம் அவ்வாறு போலீசார் பேச முடியவில்லை. அவர் அருகில் செல்வதற்கே ஒரு வித அச்சம் இருந்ததை அறிய முடிந்தது. ‛பழசெல்லாம் கண் முன் வந்து போயிருக்கும் போல,’ என, பலர் கமெண்ட் அடித்ததையும் கேட்க முடிந்தது. பணத்தை வாங்காமல் போக மாட்டேன் என காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டுள்ள சிவகாசி ஜெயலட்சுமியை பார்க்கவே தனிக்கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. அவர்களை கட்டுப்படுத்துவதே போலீசாருக்கு பெரிய தலைவலியாகிவிட்டது. பணம் திரும்ப வருமா... ஜெயலட்சுமிக்கு நிம்மதி தருமா... என்பது தெரியாத நிலையில், காத்திருப்பு போராட்டத்தில் போலீசார் கண்கள் பூத்திருக்கு.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
Breaking News LIVE : சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Breaking News LIVE : சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது தப்பா?” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
Breaking News LIVE : சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Breaking News LIVE : சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
IPL 2024 Points Table: புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முன்னேற்றம்.. ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் யார் கைகளில் தெரியுமா..?
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முன்னேற்றம்.. ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் யார் கைகளில் தெரியுமா..?
Chennai Metro Rail: மெட்ரோ பணிகளால், ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்தா? சென்னை மெட்ரோ  விளக்கம்
மெட்ரோ பணிகளால், ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்தா? சென்னை மெட்ரோ விளக்கம்
Today Rasipalan March 29: சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Embed widget