மேலும் அறிய

Crime: 'வீட்டிற்கு அடியில் புதையல்..' கூலி தொழிலாளி பெண்ணிடம் 1 லட்சம் ஏமாற்றிய போலி ஜோதிடர்

வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து ரூபாய் 40 ஆயிரம் வாங்கி வந்து இந்த பணத்தை செல்வராஜ் தெரிவித்த செல்போன் எண்ணிற்கு கூகுள் பேவில் அனுப்பி வைத்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது புழுதி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 36). பழனியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் வீட்டிற்கு நாமக்கல் மாவட்டம் இறையமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 41) என்ற ஜோதிடர் வந்துள்ளார்.

வீட்டில் புதையல்:

அப்போது ஜோதிடர் செல்வராஜிடம், பழனியம்மாள், " வீட்டில் அடிக்கடி தகராறு வருகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் சேர்வதில்லை. என்ன செய்ய வேண்டும்" என கேட்டுள்ளார். அப்போது ஜோதிடர் செல்வராஜ் உங்கள் வீட்டு சாமி அறையில் புதையல் இருக்கிறது. நான் எடுத்து தருகிறேன். புதையல் எடுத்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும். இதற்கு பூஜைகள் செய்ய வேண்டும். அதற்கு பணம் கொஞ்சம் செலவு ஆகும் என தெரிவித்துள்ளார்.

பின்னர் செல்வராஜ், பழியம்மாள் வீட்டில் பூஜை செய்துள்ளார். இந்த பூஜை முடிந்ததும் செல்வராஜ், மேலும் சில பூஜைகள் செய்ய வேண்டியது இருக்கிறது. அதற்கு பணம் தேவைப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்திருக்கிறார். இது உண்மை என நம்பிய பழனியம்மாள், அவரது கணவர் முருகேசனுக்கு தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து ரூபாய் 40 ஆயிரம் வாங்கி வந்து இந்த பணத்தை செல்வராஜ் தெரிவித்த செல்போன் எண்ணிற்கு கூகுள் பேவில் அனுப்பி வைத்தார்.

1 லட்சம் மோசடி:

இதன் பிறகு செல்வராஜ் மீண்டும் பழனியம்மாளிடம் ரூபாய் நாற்பதாயிரம் போதாது. மேலும் ஒரு 60 ஆயிரம் தாருங்கள் என கேட்டுள்ளார். இதனால் பழனியம்மாள் வீட்டில் இருந்த மேலும் சில நகைகளை அடகு வைத்து ரூபாய் 60 ஆயிரத்தை செல்வராஜை வரவைத்து கொடுத்துள்ளார். அதன்பின் செல்வராஜ், பழனியம்மானிடம் ஒரு வாரம் கழித்து வருகிறேன். வீட்டில் பூஜை செய்து புதையல் எடுத்து தருகிறேன் என்று தெரிவித்துச் சென்றார்.

Crime: 'வீட்டிற்கு அடியில் புதையல்..' கூலி தொழிலாளி பெண்ணிடம் 1 லட்சம் ஏமாற்றிய போலி ஜோதிடர்

ஆனால் மீண்டும் செல்வராஜ் வரவில்லை. பலமுறை பழனியம்மாள் செல்வராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்வராஜ் செல்போனை எடுக்கவில்லை. பின்னர் செல்போன் அணைக்கப்பட்டு விட்டது. அப்போதுதான் பழனியம்மாளுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. பிறகு இது குறித்து கணவன் முருகேசனிடம் தெரிவித்து புதையல் எடுத்து தருவதாக தெரிவித்து செல்வராஜ் என்ற ஜோதிடர் ரூபாய் ஒரு லட்சத்தை ஏமாற்றி வாங்கி சென்றதை தெரிவித்தார்.

போலி ஜோதிடர் கைது:

இதனை அறிந்த முருகேசன் அதிர்ச்சி அடைந்து, பின்னர் இது குறித்து வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கரிடம் தனது மனைவியை ஏமாற்றி பணம் பறித்த ஜோதிட செல்வராஜை பிடித்து ரூபாய் ஒரு லட்சம் பெற்றுத் தருமாறு புகார் கொடுத்தார். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி மற்றும் வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் மற்றும் காவல் உதவியாளர் உதயகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் ஜோதிடர் செல்வராஜிற்கு கூகுள் பெயரில் பணம் அனுப்பிய செல்போனை வைத்து செல்வராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் நேற்று முன்தினம் செல்வராஜ் கைது செய்யப்பட்டு வாழப்பாடி அழைத்து வரப்பட்டார். செல்வராஜ் வைத்து இருந்த ரூபாய் 30 ஆயிரம் மற்றும் ஜோதிடம் கூற பயன்படுத்தி வந்த செம்பு கலசம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது, தொடர்ந்து வேறு யாரிடமாவது இதுபோன்று பண மோசடியில் செல்வராஜ் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து காவல்துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget