மேலும் அறிய

Crime: 'வீட்டிற்கு அடியில் புதையல்..' கூலி தொழிலாளி பெண்ணிடம் 1 லட்சம் ஏமாற்றிய போலி ஜோதிடர்

வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து ரூபாய் 40 ஆயிரம் வாங்கி வந்து இந்த பணத்தை செல்வராஜ் தெரிவித்த செல்போன் எண்ணிற்கு கூகுள் பேவில் அனுப்பி வைத்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது புழுதி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 36). பழனியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் வீட்டிற்கு நாமக்கல் மாவட்டம் இறையமங்கலத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 41) என்ற ஜோதிடர் வந்துள்ளார்.

வீட்டில் புதையல்:

அப்போது ஜோதிடர் செல்வராஜிடம், பழனியம்மாள், " வீட்டில் அடிக்கடி தகராறு வருகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் சேர்வதில்லை. என்ன செய்ய வேண்டும்" என கேட்டுள்ளார். அப்போது ஜோதிடர் செல்வராஜ் உங்கள் வீட்டு சாமி அறையில் புதையல் இருக்கிறது. நான் எடுத்து தருகிறேன். புதையல் எடுத்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும். இதற்கு பூஜைகள் செய்ய வேண்டும். அதற்கு பணம் கொஞ்சம் செலவு ஆகும் என தெரிவித்துள்ளார்.

பின்னர் செல்வராஜ், பழியம்மாள் வீட்டில் பூஜை செய்துள்ளார். இந்த பூஜை முடிந்ததும் செல்வராஜ், மேலும் சில பூஜைகள் செய்ய வேண்டியது இருக்கிறது. அதற்கு பணம் தேவைப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்திருக்கிறார். இது உண்மை என நம்பிய பழனியம்மாள், அவரது கணவர் முருகேசனுக்கு தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து ரூபாய் 40 ஆயிரம் வாங்கி வந்து இந்த பணத்தை செல்வராஜ் தெரிவித்த செல்போன் எண்ணிற்கு கூகுள் பேவில் அனுப்பி வைத்தார்.

1 லட்சம் மோசடி:

இதன் பிறகு செல்வராஜ் மீண்டும் பழனியம்மாளிடம் ரூபாய் நாற்பதாயிரம் போதாது. மேலும் ஒரு 60 ஆயிரம் தாருங்கள் என கேட்டுள்ளார். இதனால் பழனியம்மாள் வீட்டில் இருந்த மேலும் சில நகைகளை அடகு வைத்து ரூபாய் 60 ஆயிரத்தை செல்வராஜை வரவைத்து கொடுத்துள்ளார். அதன்பின் செல்வராஜ், பழனியம்மானிடம் ஒரு வாரம் கழித்து வருகிறேன். வீட்டில் பூஜை செய்து புதையல் எடுத்து தருகிறேன் என்று தெரிவித்துச் சென்றார்.

Crime: 'வீட்டிற்கு அடியில் புதையல்..' கூலி தொழிலாளி பெண்ணிடம் 1 லட்சம் ஏமாற்றிய போலி ஜோதிடர்

ஆனால் மீண்டும் செல்வராஜ் வரவில்லை. பலமுறை பழனியம்மாள் செல்வராஜின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்வராஜ் செல்போனை எடுக்கவில்லை. பின்னர் செல்போன் அணைக்கப்பட்டு விட்டது. அப்போதுதான் பழனியம்மாளுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. பிறகு இது குறித்து கணவன் முருகேசனிடம் தெரிவித்து புதையல் எடுத்து தருவதாக தெரிவித்து செல்வராஜ் என்ற ஜோதிடர் ரூபாய் ஒரு லட்சத்தை ஏமாற்றி வாங்கி சென்றதை தெரிவித்தார்.

போலி ஜோதிடர் கைது:

இதனை அறிந்த முருகேசன் அதிர்ச்சி அடைந்து, பின்னர் இது குறித்து வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கரிடம் தனது மனைவியை ஏமாற்றி பணம் பறித்த ஜோதிட செல்வராஜை பிடித்து ரூபாய் ஒரு லட்சம் பெற்றுத் தருமாறு புகார் கொடுத்தார். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி மற்றும் வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் மற்றும் காவல் உதவியாளர் உதயகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் ஜோதிடர் செல்வராஜிற்கு கூகுள் பெயரில் பணம் அனுப்பிய செல்போனை வைத்து செல்வராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் நேற்று முன்தினம் செல்வராஜ் கைது செய்யப்பட்டு வாழப்பாடி அழைத்து வரப்பட்டார். செல்வராஜ் வைத்து இருந்த ரூபாய் 30 ஆயிரம் மற்றும் ஜோதிடம் கூற பயன்படுத்தி வந்த செம்பு கலசம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது, தொடர்ந்து வேறு யாரிடமாவது இதுபோன்று பண மோசடியில் செல்வராஜ் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து காவல்துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
LPG Gas Booking: கேஸ் சிலிண்டர் புக் பண்ண முடியலையா? 6 எளிய வழிகள் இதோ! மிஸ் பண்ணாதீங்க!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
Made in India Cars: ”வெத நான் போட்டது” இந்திய சந்தையை புரட்டிப்போட்ட 5 உள்ளூர் கார் மாடல்கள் - லெஜண்டு டா..
MDMK VAIKO : 4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
4 தொகுதிக்கு மதிமுக ஒப்புக்கொண்டது எப்படி.? ஸ்டாலின் போட்ட பிளானால் குஷியான வைகோ
Embed widget