மேலும் அறிய

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் திண்டிவனம் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வட ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கு 5 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுதாகர் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுதாகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ரோசனை பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 
 

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது
 
இதை அடுத்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரங்கநாதனின் மற்றொரு மகனான வழக்கறிஞர் குமார் (42) என்பவர், சொத்துக்காக தனது அண்ணனை கொலை செய்ய சொன்னதாகவும், மேலும் இதற்காக தங்களுக்கு பணம் தருவதாகவும் கூறியதாக வாக்குமூலம் அளித்தனர். 
 

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது
 
இந்த நிலையில் இது குறித்து அறிந்த குமார் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் ஜெயக்குமாருக்கும், முருகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் தருவதாக கூறிய பணத்தையும் தர முடியாது என்று கூறி உள்ளார். இதை அடுத்து ஜெயகுமார், வழக்கறிஞர் குமார் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கடலூர் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குமாரை வலைவீசி தேடி வந்தனர். 
 

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது
 
இந்த நிலையில் குமார் நேற்று திண்டிவனம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சிபிசிஐடி கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் காவல் துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் திண்டிவனம் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
உனக்கு காதலி இருக்கா? .. வயசு என்ன?.. டார்ச்சர் பண்றீங்களேப்பா.. நிர்வாகியிடம் திண்டுக்கல் சீனிவாசன் டென்ஷன்!
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
TN Heat Wave : இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
இன்று வெளியே போறீங்களா உஷாரா இருங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வானிலை மையம் எச்சரிக்கை
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (15-07-2026): மேஷத்துக்கு செலவு.. கன்னிக்கு கவலை.. உங்க ராசிக்கு இன்று நல்லது நடக்குமா? - பலன்கள் இதோ!
Embed widget