மேலும் அறிய

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் திண்டிவனம் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வட ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருக்கு 5 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுதாகர் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுதாகர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ரோசனை பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 
 

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது
 
இதை அடுத்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரங்கநாதனின் மற்றொரு மகனான வழக்கறிஞர் குமார் (42) என்பவர், சொத்துக்காக தனது அண்ணனை கொலை செய்ய சொன்னதாகவும், மேலும் இதற்காக தங்களுக்கு பணம் தருவதாகவும் கூறியதாக வாக்குமூலம் அளித்தனர். 
 

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது
 
இந்த நிலையில் இது குறித்து அறிந்த குமார் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் ஜெயக்குமாருக்கும், முருகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தான் தருவதாக கூறிய பணத்தையும் தர முடியாது என்று கூறி உள்ளார். இதை அடுத்து ஜெயகுமார், வழக்கறிஞர் குமார் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, கடலூர் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குமாரை வலைவீசி தேடி வந்தனர். 
 

சொத்தை கைப்பற்ற சொந்த அண்ணனை கூலிப்படை ஏவி கொன்ற வழக்கறிஞர் கைது
 
இந்த நிலையில் குமார் நேற்று திண்டிவனம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சிபிசிஐடி கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் காவல் துறையினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் திண்டிவனம் பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Embed widget