மேலும் அறிய

சோமஸ்கந்தர் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் காலதாமதம் - மிரட்டப்படுவதாக மனுதாரர் அதிர்ச்சி தகவல்

"நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் காலதாமதத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவிக்கிறார் டில்லிபாபு.

சோமாஸ்கந்த முறைகேடு:
 
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சேர்ந்து இருக்கும் இந்த சிலையில் ஏற்பட்ட சேதம் காரணமாக வேறு ஒரு தங்க சிலையை முத்தையா ஸ்தபதி வடித்து இருந்தார். இதற்காக 100 கிலோ தங்கம், பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய சிலையில் துளி அளவு கூட தங்கம் இல்லை என அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் கடந்த 2017-ல் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

சோமஸ்கந்தர் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் காலதாமதம் - மிரட்டப்படுவதாக மனுதாரர் அதிர்ச்சி தகவல்
 
மாற்றப்பட்ட வழக்கு
 
பின்னர் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அறநிலையத் துறையின் அப்போதைய ஆணையர் வீரசண்முகமணி, திருப்பணிகளுக்கான கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி மற்றும் ஸ்தானிகர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டு, பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
 

சோமஸ்கந்தர் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் காலதாமதம் - மிரட்டப்படுவதாக மனுதாரர் அதிர்ச்சி தகவல்
 
சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீது நம்பிக்கை வைத்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஒப்படைத்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 4 ஆண்டுகளாக நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததைத்தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த வழக்கை மீண்டும் சிவகாஞ்சி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறேன். இந்த வழக்கின் ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் உடனடியாக சிவகாஞ்சி போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் 90 நாட்களுக்குள் விசாரணையை முடித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்
 

சோமஸ்கந்தர் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் காலதாமதம் - மிரட்டப்படுவதாக மனுதாரர் அதிர்ச்சி தகவல்
 
தொடர்ந்து கால தாமதம்
 
இதுகுறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை என , கூறுகிறார் சமூக ஆர்வலர் டில்லிபாபு. இதுகுறித்து அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், யாரைக் காப்பாற்றுவதற்காக இது போன்ற காலதாமதம் ஏற்படுகிறது என டில்லிபாபு கேள்வி கேள்வி எழுப்புகிறார்.
 
திட்டமிட்டு  மிரட்டுவதாக புகார்
 
இதுகுறித்து புகார் அளித்து வழக்கு நடத்திவரும் அண்ணாமலை கூறுகையில், இந்த தங்கம் முறைகேடு வழக்கையும், தொன்மையான உற்சவரை கடத்த முயற்சி செய்தது மேலும் திருக்கோவிலில், பல உற்சவர்களை கடத்தியதும் பல கிலோ தங்கம் வெள்ளி திருவாபரணங்கள் திருடுபோனது என அனைத்து  குற்றச்சாட்டுகளையும், மூடி மறைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் போலிசாருக்கு லஞ்சம் கொடுத்து,  மனுதாரர்கள் ஆகிய எங்கள் மீது தொடர்ந்து, முன்று பொய்யான புகாரை பதிவு செய்து சரித்திர பதிவேடு குற்றவாளியாக சித்தரித்தும், எங்கள் குடும்பத்தை போலிசார் சித்திரவதை செய்து வருகின்றனர் . நாங்கள் மேற்கொண்ட வழக்கில் எந்த ஆதாரம் கொடுக்க கூடாது என்றும், சாட்சி சொல்ல கூடாது என்றும் ஆய்வாளர் சிவகுமார் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களை காவல் நிலையத்தில் வைத்து எனவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கிறார் அண்ணாமலை.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Premium Bikes Launch 2026: Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Premium Bikes Launch 2026: Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Royal Enfield Bullet 650 Twin முதல் KTM RC 160 வரை; 2026-ல் வரிசை கட்டும் 5 ப்ரீமியம் பைக்குகள்; விலை என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
TVS iQube ST vs Ather Rizta Z; ரேஞ்ச், அம்சங்களில் எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? வாங்க பார்க்கலாம்
TVS iQube ST vs Ather Rizta Z; ரேஞ்ச், அம்சங்களில் எந்த மின்சார ஸ்கூட்டர் சிறந்தது.? வாங்க பார்க்கலாம்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
BSNL Introduced Wi-Fi calling facility: மொபைலில் சிக்னல் இல்லையா.!இனி கவலையே வேண்டாம்- புதிய Wi-Fi வசதியை அறிவித்த BSNL
இனி மொபைலில் சிக்னல் இல்லாமலே பேசலாம்.! கட்டணம் எதுவும் இல்லை- BSNL புதிய Wi-Fi காலிங் வசதி அறிமுகம்
Embed widget