மேலும் அறிய

சோமஸ்கந்தர் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் காலதாமதம் - மிரட்டப்படுவதாக மனுதாரர் அதிர்ச்சி தகவல்

"நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் காலதாமதத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் தெரிவிக்கிறார் டில்லிபாபு.

சோமாஸ்கந்த முறைகேடு:
 
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சேர்ந்து இருக்கும் இந்த சிலையில் ஏற்பட்ட சேதம் காரணமாக வேறு ஒரு தங்க சிலையை முத்தையா ஸ்தபதி வடித்து இருந்தார். இதற்காக 100 கிலோ தங்கம், பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த புதிய சிலையில் துளி அளவு கூட தங்கம் இல்லை என அண்ணாமலை என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் கடந்த 2017-ல் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

சோமஸ்கந்தர் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் காலதாமதம் - மிரட்டப்படுவதாக மனுதாரர் அதிர்ச்சி தகவல்
 
மாற்றப்பட்ட வழக்கு
 
பின்னர் இந்த வழக்கு விசாரணை கடந்த 2019-ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அறநிலையத் துறையின் அப்போதைய ஆணையர் வீரசண்முகமணி, திருப்பணிகளுக்கான கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி மற்றும் ஸ்தானிகர்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்யப்பட்டு, பின்னர்ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
 

சோமஸ்கந்தர் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் காலதாமதம் - மிரட்டப்படுவதாக மனுதாரர் அதிர்ச்சி தகவல்
 
சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீது நம்பிக்கை வைத்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஒப்படைத்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 4 ஆண்டுகளாக நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததைத்தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த வழக்கை மீண்டும் சிவகாஞ்சி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறேன். இந்த வழக்கின் ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் உடனடியாக சிவகாஞ்சி போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் 90 நாட்களுக்குள் விசாரணையை முடித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்
 

சோமஸ்கந்தர் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் காலதாமதம் - மிரட்டப்படுவதாக மனுதாரர் அதிர்ச்சி தகவல்
 
தொடர்ந்து கால தாமதம்
 
இதுகுறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்யப்படவில்லை என , கூறுகிறார் சமூக ஆர்வலர் டில்லிபாபு. இதுகுறித்து அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், யாரைக் காப்பாற்றுவதற்காக இது போன்ற காலதாமதம் ஏற்படுகிறது என டில்லிபாபு கேள்வி கேள்வி எழுப்புகிறார்.
 
திட்டமிட்டு  மிரட்டுவதாக புகார்
 
இதுகுறித்து புகார் அளித்து வழக்கு நடத்திவரும் அண்ணாமலை கூறுகையில், இந்த தங்கம் முறைகேடு வழக்கையும், தொன்மையான உற்சவரை கடத்த முயற்சி செய்தது மேலும் திருக்கோவிலில், பல உற்சவர்களை கடத்தியதும் பல கிலோ தங்கம் வெள்ளி திருவாபரணங்கள் திருடுபோனது என அனைத்து  குற்றச்சாட்டுகளையும், மூடி மறைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் போலிசாருக்கு லஞ்சம் கொடுத்து,  மனுதாரர்கள் ஆகிய எங்கள் மீது தொடர்ந்து, முன்று பொய்யான புகாரை பதிவு செய்து சரித்திர பதிவேடு குற்றவாளியாக சித்தரித்தும், எங்கள் குடும்பத்தை போலிசார் சித்திரவதை செய்து வருகின்றனர் . நாங்கள் மேற்கொண்ட வழக்கில் எந்த ஆதாரம் கொடுக்க கூடாது என்றும், சாட்சி சொல்ல கூடாது என்றும் ஆய்வாளர் சிவகுமார் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களை காவல் நிலையத்தில் வைத்து எனவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கிறார் அண்ணாமலை.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வயசு 80..ஆனா வீரம் குறையல !! பாலியல் அத்துமீறல் செய்ய முயன்ற பெயிண்டரை கதறவிட்ட மூதாட்டி
வயசு 80..ஆனா வீரம் குறையல !! பாலியல் அத்துமீறல் செய்ய முயன்ற பெயிண்டரை கதறவிட்ட மூதாட்டி
ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம் ; உடந்தையாக இருந்த பெண் உட்பட 3 பேர் கைது
ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம் ; உடந்தையாக இருந்த பெண் உட்பட 3 பேர் கைது
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
Maragatham Kumaravel: அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு, 8 மாவட்டங்களுக்கு அலெர்ட், சென்னை நிலவரம்? தமிழக வானிலை
இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு, 8 மாவட்டங்களுக்கு அலெர்ட், சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Esakki Subaya MLA : தவெகவிற்கு இன்று பல்டி அடிக்கும் அடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இபிஎஸ்க்கு ஷாக் - நடப்பது என்ன.?
தவெகவிற்கு பல்டி அடிக்கும் அடுத்த அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இபிஎஸ்க்கு ஷாக் - நடப்பது என்ன.?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
Embed widget