மேலும் அறிய

தண்ணீர் பிடிப்பதில் தகராறு...! மண்வெட்டி கட்டையால் அடித்து மாமியார் கொலை..! போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை..!

சேலத்தில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாமியாரை கட்டையால் தாக்கி கொலை செய்த மருமகள் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அமைந்துள்து கொங்கணாபுரம் தானமூர்த்தியூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் எல்லப்பன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். இவரது மனைவி தைலம்மாள். இவருக்கு வயது 75. இவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள்.

கணவன் இறந்த பிறகு தைலம்மாள் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வீட்டின் அருகிலே அவரது மகன்கள் வீடு இருந்துள்ளது. தைலம்மாள் வீட்டின் அருகிலே அவரது கடைசி மகன் மெய்வேல் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.


தண்ணீர் பிடிப்பதில் தகராறு...! மண்வெட்டி கட்டையால் அடித்து மாமியார் கொலை..! போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை..!

மெய்வேலின் மனைவி செல்வி. அவருக்கு வயது 43. மெய்வேலின் மனைவி செல்விக்கும், தைலம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருந்தது. மாமியார் – மருமகள் இடையே தண்ணீர் பிடிப்பதில் இருந்து பல்வேறு விஷயங்கள் காரணமாக தொடர்ந்து வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையிலும் மாமியாருக்கம், மருமகளுக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த செல்வி தனது மாமியார் தைலம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தைலம்மாளும் ஆத்திரத்தில் மருமகள் செல்வியிடம் பேசியுள்ளார். பின்னர், மாமியார் தைலம்மாள் வீட்டுக்கு சென்ற மருமகள் செல்வி அங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த செல்வி மாமியார் என்றும் பாராமல் அருகே இருந்த மண்வெட்டிக்கு பயன்படுத்தும் கட்டையை எடுத்து தைலம்மாள் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.



தண்ணீர் பிடிப்பதில் தகராறு...! மண்வெட்டி கட்டையால் அடித்து மாமியார் கொலை..! போலீசுக்கு பயந்து மருமகள் தற்கொலை..!

இதனால், தைலம்மாள் தலையில் இருந்த ரத்தம் கொட்டியது. இதனால், வலி தாங்க முடியாத தைலம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மகன் மெய்வேல் உடனடியாக தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

தனது மாமியார் உயிரிழந்த தகவல் அறிந்த செல்வி மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளார். போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் வீட்டின் உள்ளே சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தண்ணீர் பிடிக்கும் தகராறில் மாமியாரை மருமகளே கட்டையால் அடித்துக் கொலைசெய்ததும், பின்னர் அவர் போலீசாருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
Embed widget