![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: நாகையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது - தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி
திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: நாகையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது - தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி DMK Panchayat Council President and son Union Councilor arrested in Nagai on the orders of National Narcotics Control Unit officials TNN Crime: நாகையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது - தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/09/8c073340b2c73a3683988ef1da79ff311683625135078113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாகையில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவு பேரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகன் ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டனர். தனிப்படை போலீசார் கைது செய்து கடலூரில் ஒப்படைத்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் புல்லட் மகாலிங்கம் என்கிற மகாலிங்கம் உள்ளார். இவருக்கு இலங்கை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில் டெல்லியில் ஒரு வாகனத்தில் சோதனை செய்கின்றனர். அந்த வாகனத்தில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஐஸ் மச்சா என்று சொல்ல கூடிய போதை பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தின் ஓட்டுனரை பிடித்து விசாரணை செய்த போது நாகப்பட்டினத்தை சேர்ந்த மகாலிங்கத்திடம் ஒப்படைக்க செல்வதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தேசிய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விழுந்தமாவடியில் உள்ள மகாலிங்கம் வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். சோதனையில் எந்த போதைப்பொருளும் சிக்காத நிலையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் கீழையூர் ஒன்றிய குழு உறுப்பினர் அலெக்ஸ் ஆகியோரை உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவரையும் நேற்று இரவு வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் இருந்து கீழையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அளித்து சென்று சென்னையிலிருந்து வந்த தேசிய பாதை பொருள் அதிகாரியிடம் கடலூரில் ஒப்படைத்தனர். திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)