மேலும் அறிய

Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...கள்ளக் காதலியுடன் கூட்டு சேர்ந்து மனைவியை கொன்ற கணவர் கைது - சிக்கியது எப்படி..?

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவர் மற்றும் கள்ளக்காதலியை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள அரண்மனையூரை சேர்ந்தவர் தேவி(32). இவருக்கும் பூத்தாம்பட்டியை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி ராஜசேகர்(40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...கள்ளக் காதலியுடன் கூட்டு சேர்ந்து மனைவியை கொன்ற கணவர் கைது - சிக்கியது எப்படி..?

இந்த நிலையில் ராஜசேகருக்கு ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த சரோஜாதேவி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த தேவி ராஜசேகரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தேவி வடமதுரை மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார். அப்போது போலீசார் ராஜசேகரை கண்டித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் கணவன் மனைவி இருவரும் பூத்தாம்பட்டியில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்னர் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு 3 மகன்களை கூட்டிக்கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று அரண்மனையூருக்கு வந்த ராஜசேகர் தேவியின் வீட்டில் இருந்துள்ளார்.  காலை தேவியின் தாய் வேலைக்கு சென்று விட்டார். கணவன் மனைவி மட்டும் வீட்டில் இருந்த போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.


Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...கள்ளக் காதலியுடன் கூட்டு சேர்ந்து மனைவியை கொன்ற கணவர் கைது - சிக்கியது எப்படி..?

அப்போது ராஜசேகர் தேவியின் தலையை பிடித்து ஜன்னல் கம்பியில் மோதி கீழே தள்ளி வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். அதன் பிறகு ராஜசேகர் தனது மகன்களை தனது மோட்டார் சைக்கிளில் கூட்டிக்கொண்டு பூத்தாம்பட்டியில் சென்று வீட்டில் தனது அம்மா வீட்டில் விட்டு விட்டு தனது கள்ளக் காதலியான சரோஜாதேவியுடன் திருச்சிக்கு தப்பி சென்றுள்ளார். அங்கிருந்து ராஜசேகர் தன்னுடைய நண்பருக்கு என்ன நடக்கிறது என்பதை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

Half Yearly Exam: 6 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15-இல் தொடங்குகிறது அரையாண்டுத் தேர்வு..

இதனை அடுத்து வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜசேகரின் தொலைபேசியை நோட்டமிட்டு ராஜசேகர் திருச்சியில் இருப்பது தெரியவந்தது. இதைஅடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் ராஜசேகர் மற்றும் தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சரோஜாதேவி நான் தான் ராஜசேகரை என்னுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் முதலில் உன் மனைவியை கொலை செய்துவிட்டு வா அப்போது இருவரும் சந்தோஷமாக வாழலாம் என்று கூறியதாக வாக்குமூலம் அளித்தார். அதனால் தான் ராஜசேகர் மனைவி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். கள்ளக்காதல் தொடர்பால் மனைவி கொலை செய்து விட்டு மூன்று குழந்தைகள் நடுரோட்டில் நிற்கும் அவலம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget