மேலும் அறிய

Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...கள்ளக் காதலியுடன் கூட்டு சேர்ந்து மனைவியை கொன்ற கணவர் கைது - சிக்கியது எப்படி..?

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவர் மற்றும் கள்ளக்காதலியை வேடசந்தூர் போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டி அருகே உள்ள அரண்மனையூரை சேர்ந்தவர் தேவி(32). இவருக்கும் பூத்தாம்பட்டியை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி ராஜசேகர்(40) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...கள்ளக் காதலியுடன் கூட்டு சேர்ந்து மனைவியை கொன்ற கணவர் கைது - சிக்கியது எப்படி..?

இந்த நிலையில் ராஜசேகருக்கு ரெட்டியார் சத்திரத்தை சேர்ந்த சரோஜாதேவி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த தேவி ராஜசேகரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தேவி வடமதுரை மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார். அப்போது போலீசார் ராஜசேகரை கண்டித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் கணவன் மனைவி இருவரும் பூத்தாம்பட்டியில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்னர் கணவன் மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு 3 மகன்களை கூட்டிக்கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று அரண்மனையூருக்கு வந்த ராஜசேகர் தேவியின் வீட்டில் இருந்துள்ளார்.  காலை தேவியின் தாய் வேலைக்கு சென்று விட்டார். கணவன் மனைவி மட்டும் வீட்டில் இருந்த போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.


Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...கள்ளக் காதலியுடன் கூட்டு சேர்ந்து மனைவியை கொன்ற கணவர் கைது - சிக்கியது எப்படி..?

அப்போது ராஜசேகர் தேவியின் தலையை பிடித்து ஜன்னல் கம்பியில் மோதி கீழே தள்ளி வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். அதன் பிறகு ராஜசேகர் தனது மகன்களை தனது மோட்டார் சைக்கிளில் கூட்டிக்கொண்டு பூத்தாம்பட்டியில் சென்று வீட்டில் தனது அம்மா வீட்டில் விட்டு விட்டு தனது கள்ளக் காதலியான சரோஜாதேவியுடன் திருச்சிக்கு தப்பி சென்றுள்ளார். அங்கிருந்து ராஜசேகர் தன்னுடைய நண்பருக்கு என்ன நடக்கிறது என்பதை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

Half Yearly Exam: 6 -12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15-இல் தொடங்குகிறது அரையாண்டுத் தேர்வு..

இதனை அடுத்து வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜசேகரின் தொலைபேசியை நோட்டமிட்டு ராஜசேகர் திருச்சியில் இருப்பது தெரியவந்தது. இதைஅடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் ராஜசேகர் மற்றும் தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சரோஜாதேவி நான் தான் ராஜசேகரை என்னுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் முதலில் உன் மனைவியை கொலை செய்துவிட்டு வா அப்போது இருவரும் சந்தோஷமாக வாழலாம் என்று கூறியதாக வாக்குமூலம் அளித்தார். அதனால் தான் ராஜசேகர் மனைவி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். கள்ளக்காதல் தொடர்பால் மனைவி கொலை செய்து விட்டு மூன்று குழந்தைகள் நடுரோட்டில் நிற்கும் அவலம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
Train Timing Change: ஜன.1ம் தேதி முதல் தமிழ்நாட்டில் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - எந்தெந்த ட்ரெயின்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
PMK: இன்று பாமக பொதுக்குழு கூட்டம்..! கூட்டணி முடிவை அறிவிக்கிறாரா ராமதாஸ்?
January holidays: ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
ஜனவரியில் இவ்வளவு நாள் தொடர் விடுமுறையா.? சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: கல்யாண வரம் வேண்டி குவிந்த பக்தர்கள்!
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
100க்கும் மேற்பட்ட புற்று நோய் அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் சாதனை
Tamilnadu Roundup: பாமக பொதுக்குழு.. திமுக மகளிரணி மாநாடு - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: பாமக பொதுக்குழு.. திமுக மகளிரணி மாநாடு - பரபரக்கும் தமிழ்நாடு
Trump Russia Ukraine: என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
என்னய்யா சொல்றீங்க.?! “உக்ரைன் வெற்றிபெற ரஷ்யா விரும்பியது“: ஜெலன்ஸ்கியை சந்தித்தபின் ட்ரம்ப்
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Swift-ஆ? Baleno-ஆ? புத்தாண்டுக்கு வாங்க பெஸ்ட் கார் இதுதான்! முழு கம்பேரிசன்!
Embed widget