மேலும் அறிய

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?

அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களின் வீடுகளை குறி வைத்து,  பகல் நேரங்களில் மட்டும் பூட்டிய வீடுகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர்.

அரூர் பகுதியில் ஆளில்லா வீட்டில் கொள்ளையடிக்கும் பகல் கொள்ளைக்காரனை, அரூர் காவல் துறையினர் கைது செய்து, 17 சவரன் தங்க நகையை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.
 
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த அ.ஈச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஜெயக்குமார்,(47)-செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.  கடந்த 6 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, இந்த தம்பதியினர் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு இருவரும் தனித்தனியாக வேலைக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து வேலையை முடித்து விட்டு மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பிய ஜெயக்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க செயின், 4 பவுன் வளையல், நான்கரை பவுன் ஆரம், ஒன்றரை பவுன் பிரேஸ்லெட் என மொத்தம் 17 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?
 
அதேப்போல் அதேப்பகுதியில் உள்ள செந்தாமரை வீட்டை பூட்டிவிட்டு, தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் மகள் ஶ்ரீ தேவி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுவதால் அவரும் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை வந்து பார்த்துபோது வீட்டின் பூட்டை, பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்துள்ளது‌. இதனை தொடர்ந்து பீரோவில் இருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20,000 திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?
 
இதுகுறித்து ஜெயக்குமார் மற்றும் செந்தாமரை ஆகியோர் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த, காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை பரிசோதனை செய்தனர். அப்பொழுது ஒருவர் சுற்றி திரிவது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்தும், செல்போன் சிக்னலை வைத்து, விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் அடிக்கடி சுற்றி திரிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திருடும் பகல் திருடன் - சிக்கியது எப்படி..?
 
இதனை தொடர்ந்து காவேரிப்பட்டினத்தில் இருந்த ராஜ்குமாரை, காவல் துறையினர் கைது செய்து அரூருக்கு அழைத்து வந்தனர். மேலும் விசாரணை நடத்தியதில், அ.ஈச்சம்படி பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்து தெரியவந்தது.  இந்த கொள்ளையன் அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களின் வீடுகளை குறி வைத்து,  பகல் நேரங்களில் மட்டும் பூட்டிய வீடுகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர். மேலும் விசாரணையில்,  ஏற்கனவே அரூர் பகுதியில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 10 வழக்குகள் இருந்து வருகிறது. தொடர்ந்து ராஜ்குமாரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 17 பவுன் தங்க நகைகள் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகம் செல்வது போல, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொள்ளைடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
 
 

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget