மேலும் அறிய

தருமபுரி அருகே காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு - பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை

தருமபுரி அருகே சிறுவனை கடத்திச் சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அருகே கடந்த 2 தினங்களுக்கு முன்பு காணாமல் போன 6 வயது சிறுவன், வாய், கைகளை கட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்தது, காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தருமபுரி அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம் சுதா தம்பதியினருக்கு மதியரசு (6) மற்றும் 3 வயதில் மற்றொரு மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆதிமூலம் ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் சிறுவன் மதியரசு காணவில்லை என உறவினர்கள் மற்றும் கிராமத்தில் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் மனு அளித்துள்ளனர். 

இந்த புகாரை பெற்று கொண்டு கிருஷ்ணாபுரம காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் 19 என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், அவர் சிறுவன் மதியரசுவை கொலை செய்து அருகில் இருந்த அருந்ததியர் காலனி பகுதியில் பயன்பாட்டிற்கு இல்லாத தண்ணீர் இன்றி காலியாக இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சடலமாக போட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். 

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சடலமாக இருந்த சிறுவனை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் அதே பகுதியைச் சேர்ந்த  பிரகாஷ் என்பவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்தும், இந்த கொலையில் மேலும் வேறு யாரேனும் தொடர்பு உள்ளார்களா எனவும், மேலும் கடந்த 16 ந் தேதி இரவு அமாவாசை தினம் என்பதால் ஏதேனும் நரபலி கொடுக்கபட்டுள்ளதா எனவும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சிறுவனுடன், பிரகாசம் அடிக்கடி சேர்ந்து கொண்டு விளையாடி வந்ததாகவும், சம்பவத்தன்று சிறுவனை ஆசை வார்த்தை கூறி, அருகில் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது அழைத்துச் சென்று உள்ளே இறங்கி, சிறுவனின் கை, வாயை கட்டி வைத்து, சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் சிறுவனை வெளியில் விட்டால், நடந்த சம்பவத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்து விடுவார் என்ற எண்ணத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் இறந்ததை உறுதி செய்தவுடன், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து கீழே இறங்கி பிரகாஷ் சென்றது காவல்துறையினரின் விசாரணையில் பிரகாஷ் ஒப்புக் கொண்டுள்ளார். தருமபுரி அருகே சிறுவனை கடத்திச் சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
Simple Energy E-Scooter: நாட்டின் முதல் 400KM ரேஞ்ச் மின்சார ஸ்கூட்டர் - 115KM ஸ்பீட், விலை எவ்வளவு? சிட்டிக்கு வரமா?
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
Embed widget