மேலும் அறிய

நள்ளிரவில் 30 கார் கண்ணாடிகள் உடைப்பு - அரூரில் பொதுமக்கள் அச்சம்

பொதுமக்கள் மத்தியில் அச்சம் - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் விசாரணை.

அரூரில் நள்ளிரவில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கிய மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
தருமபுரி மாவட்டம் அரூர் மேல்பாட்சா பேட்டை, கீழ்பாட்சாபேட்டை, அசோகா பட்டறை, தில்லை நகர்  உள்ளிட்ட பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் டாட்டா ஏசி பிக் அப் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் மூலம் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் வைத்துள்ள கார், ஆட்டோ, பிக்கப் வாகனம் உள்ளிட்டவற்றை இரவு நேரங்களில் தங்களது வீட்டின் முன் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை இரும்பு கம்பி மற்றும் கற்களால் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
 
இந்நிலையில் அதிகாலையில் எழுந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடிகள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இந்த சம்பவம் தில்லை நகர், மேல்பாட்ஷாப்பேட்டை, கீழ்பாட்ஷாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் முழுவதுமாக நடைபெற்று உள்ளது தெரிய வந்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைக்கப்படும், இருசக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் 30 கார் கண்ணாடிகள் உடைப்பு - அரூரில் பொதுமக்கள் அச்சம்
 
இதுகுறித்து அரூர் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையிலான 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய காவல் துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டு, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் அரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அரூரை சுற்றியுள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு, சேலம் பிரதான சாலை, முருகன் கோயில் தெரு போன்ற இடங்களிலும் லாரிகள், கார் கண்ணாட்டி,  இருசக்கர வாகனம் மற்றும் வீடுகளின் கண்ணாடிகள் கூட உடைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் காவல் துறையினர் நகர் பகுதி முழுவதுமாக தினந்தோறும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அதேபோல் நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர் கார் கண்ணாடி உடைத்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget