மேலும் அறிய

வாணலிச் சட்டியை வைத்து ஏடிஎம்மில் திருடிய நபர்.. விரைந்து பிடித்த டெல்லி காவல்துறை!

டெல்லியில் உத்தம் நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் வாணலிச் சட்டியைப் பயன்படுத்தி திருட முயன்ற நபரைக் காவல்துறையினர் கடந்த பிப்ரவரி 13 அன்று கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் உத்தம் நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் வாணலிச் சட்டியைப் பயன்படுத்தி திருட முயன்ற நபரைக் காவல்துறையினர் கடந்த பிப்ரவரி 13 அன்று கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா மூலமாக இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்தும், அதில் ஈடுபட்டவரைக் குறித்தும் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த வீடியோவில் அஷத் அலி என்ற நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க வாணலிச் சட்டி பயன்படுத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் இந்த சிசிடிவி வீடியோவைக் கைப்பற்றியதோடு, அதன் பின்னர் திருட முயன்ற நபரையும் கைது செய்துள்ளது. 

இந்தத் திருட்டு முயற்சி குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையின் போது, காவல்துறையினர் நூற்றுக்கணக்கான சிசிடிவி வீடியோக்களைப் பல்வேறு இடங்களில் சோதனை செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து உத்தம் நகர் பகுதியில் உள்ள அஷத் அலியின் வீட்டில் அவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் இருந்த, திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட வாணலிச் சட்டியையும் கைப்பற்றியுள்ளனர். 

வாணலிச் சட்டியை வைத்து ஏடிஎம்மில் திருடிய நபர்.. விரைந்து பிடித்த டெல்லி காவல்துறை!

அஷத் அலியைக் கைது செய்த பிறகு, அவரை விசாரித்ததில் அவர் மதுவுக்கு அடிமையானவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், தான் பொருளாதார சிக்கலில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே ஏடிஎம் மையத்தில் திருட முயன்றதாகவும் தெரிவித்துள்ளார் அஷத் அலி. 

இந்திய கிரிமினல் சட்டத்தின் 380, 511 ஆகிய பிரிவுகளின் கீழ் அஷத் அலி மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

மற்றொரு வழக்கில், டெல்லி காவல்துறையினர் ஏடிஎம் மையங்களைக் குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட வந்த திருட்டு கும்பல் ஒன்றைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளது. பத்லி தொழிற்பகுதியில் இருந்து ஏடிஎம் மையத்தைத் திருட இந்த கும்பல் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சமய்பூர் பத்லி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள், பத்லி தொழிற்பகுதிக்குச் செல்லும் வழியில் வைத்திருந்த பொறியில் சிக்கியது இந்த கும்பல். 

வாணலிச் சட்டியை வைத்து ஏடிஎம்மில் திருடிய நபர்.. விரைந்து பிடித்த டெல்லி காவல்துறை!

சாஹிப், ஷகீல், ஆபித் என இந்த மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், பத்லி தொழிற்பகுதிக்குச் செல்லும் வழியின் கேனல் சாலையில் காவலர்கள் திருடர்களைத் தடுக்க முயன்ற போது, கைது செய்யப்படுவதைத் தவிர்க்க குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான சாஹிப் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினரும் மூன்று முறை சுட்டதாகவும், அதில் சாஹிப் சுடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்ற இரு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
Embed widget