மேலும் அறிய

Crime : மகனுடன் இணைந்து கணவரின் உடல் பாகங்களை வெட்டிய பெண்.. ஃப்ரிட்ஜுக்குள் வைத்து டிஸ்போஸ்.. என்னதான் நடக்கிறது?

இச்சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் அடங்குதவற்குள் இதேபோன்ற கொலை சம்பவங்கள் நடந்துவருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

டெல்லியில் நடந்த ஷர்த்தா கொலை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார்.

இச்சம்பவம் ஏற்படுத்திய தாக்கம் அடங்குதவற்குள் இதேபோன்ற கொலை சம்பவங்கள் நடந்து வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, டெல்லியின் கிழக்கு பகுதியில் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு கொலை நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளது.

கணவரை, அவரது மனைவியும் அவரது மகனும் கொன்று, அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்னர் கிழக்கு டெல்லியில் பல்வேறு இடங்களில் அவற்றை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. டெல்லி காவல்துறை குற்றப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம், பாண்டவ் நகரில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை போலீசார் முதலில் கண்டெடுத்தனர். ஆனால், அவை சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. ஷ்ரத்தா கொலை வழக்கின் கொடூர தகவல்கள் வெளிவரத் தொடங்கிய பிறகு, அடையாளம் தெரியாத உடல் உறுப்புகள் அவருடையதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. 

ஆனால், தற்போது அவை பாண்டவ் நகரில் வசிக்கும் அஞ்சன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். திருமணம் தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பூனம் மற்றும் அவரது மகன் தீபக் ஆகியோர் சேர்ந்து கணவரை கடந்த ஜூன் மாதம் கொலை செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டுள்ள கணவர், திருமணம் தாண்டிய உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில், கோபமடைந்த பெண், மகனுடன் சேர்ந்து தனது கணவரை 22 பாகங்களாக வெட்டி கொலை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கு முதலில் தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். பின்னர், அவரது உடலை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து பாண்டவ் நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். 

அக்கம் பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் இருந்து அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இரவில் தனது கையில் பையுடன் தீபக் நடந்து செல்வது அதில் பதிவாகியுள்ளது.

வெட்டப்பட்ட உடல் துண்டுகளை தூக்கி எறிவதற்காக அவர் சென்றிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். அவரது தாயார் பூனம் அவரைப் பின்தொடர்கிறார். பட்டப்பகலில் எடுக்கப்பட்ட வேறொரு வீடியோவில், அவர்கள் உடல் பாகங்களை அப்புறப்படுத்துவதற்காக இடத்தை தேடி அலைவது பதிவாகியுள்ளது.

டெல்லி கொலை வழக்கில் அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 

வேறு யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Embed widget