மேலும் அறிய

Crime: 'மனைவியை காணோம்'.. காவல்நிலையம் வந்த கணவர்..! விசாரணையில் ஷாக்கான போலீசார்!

மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன்-மனைவி ஆகியோருக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் சில சமயத்தில் விபரீதத்தில் சென்று முடிந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெறுள்ளது. தன்னுடைய மனைவியை கணவர் கொலை செய்து விட்டு காணவில்லை என்று நாடகம் ஆடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியின் மைதான்கார்ஹி பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(32). இவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் புலந்த்சாஹர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் டெல்லியில் வசித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் சுனில் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய மனைவியை 13ஆம் தேதி முதல் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். 

அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு சுனில் குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. இதன்காரணமாக அவரை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தன்னுடைய மனைவி காணமல் போன 10 நாட்களுக்கு பிறகு எப்படி திடீரென்று புகார் அளித்தார் என்ற சந்தேகமும் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. 

 

இதைத் தொடர்ந்து சுனில் குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சுனில் குமார் தன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அவருடைய மனைவியின் சடலம் காட்டிற்குள் ஒரு பகுதியில் இருப்பதாக தெரிவித்தார். அவர் கூறிய தகவலை வைத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுனில் குமாருடன் சேர்ந்து அவருடைய சகோதரர் சோட்டு(27) ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

சுனில் குமார் மற்றும் அவருடைய சகோதரர் ஆகிய இருவரின் மீது கொலை குற்றம் தொடர்பான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுனில் குமார் மீது ஆவணங்களை மறைத்தல், தவறாக காவல்துறையினரை வழிநடத்தியது என்பது தொடர்பாக வழக்குகளை பதிவு செய்துள்ளனர். சுனில் குமார் மீது மனைவியின் குடும்பத்தினர் உத்தரபிரதேசத்தில் புகார் அளித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுனில் குமாரை தற்போது கைது கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சுனில் குமாரின் சகோதரர் சோட்டுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மனைவியை கொலை செய்துவிட்டு காணவில்லை என்று கணவர் நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget