மேலும் அறிய

திருடு போன பொருள்: சூனியக்காரர் சொன்ன சொல் - வீட்டுப் பணிப்பெண்னை நிர்வாணமாக்கி அடித்த கொடூரம்

டெல்லியில் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பதைபதைக்க வைத்துள்ளது.

டெல்லியில் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பதைபதைக்க வைத்துள்ளது.

டெல்லியில் வீட்டுப் பணிப் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் நடுங்கவைப்பதாக உள்ளது.  தெற்கு டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்பகுதியில் ஒரு பெரும் பணக்காரக் குடும்பத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். அந்த வீட்டில் 10 மாதங்களுக்கு முன்னர் சில விலையுயர்ந்த பொருட்கள் திருடு போயுள்ளது. அந்தப் பொருட்களைக் கண்டுபிடிக்க சூனியக்காரர்கள் உதவியை நாடியுள்ளனர் அக்குடும்பத்த்னர். இந்நிலையில் தான் அந்த சூனியக்காரர்கள் வீட்டில் இருந்து ஒரு குறிப்பிட்டப் பெண்ணைக் காட்டி இவர் தான் திருடியிருப்பார் எனக் கூறினர்.

எலுமிச்சை சாதத்தில் மாந்த்ரீகம்:

இதனைக் கண்டுபிடிக்க அந்த சூனியக்கார குழு வீட்டில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் எலுமிச்சை கலந்த அரிசியை சாப்பிடக் கொடுத்துள்ளார். அதை சாப்பிடுபவர்களில் யாருடைய வாய் சிவக்கிறதோ அவர்கள் தான் திருடியவர்கள் என்று கூறியது. அதேபோல் அதை அனைத்து பணியாளர்களும் சாப்பிட்டனர். அதில் 43 வயது பெண் ஒருவரின் வாய் சிவந்தது. உடனே அவர் தான் திருடியவர் என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்தனர்.

மேலும் அந்தப் பெண்ணை ஆடையின்றி ஓர் அறையில் அடைத்து வைத்தனர். சம்பவம் நடந்த பண்ணை வீடு அன்சால் விலாஸ் பகுதியில் உள்ளது. ஒரு நாள் முழுவதும் அந்தப் பெண் ஆடையின்றி தவித்த நிலையில் கழிவறை செல்ல உடையைத் தருமாறு கதறியுள்ளார். அவருக்கு கொஞ்சம் ஆடையை வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்தனர். அதை அணிந்து கொண்டு கழிவறை சென்றவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

பின்னர் வீட்டு உரிமையாளரிடம் தான் எலி மருந்தை சாப்பிட்டுவிட்டதாகக் கூறினார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போதுதான் போலீஸுக்கு தகவல் தெரியவந்தது. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் வீட்டு வேலைக்காக ஆள் வைப்பது வழக்கமாகிவிட்டது. சில வீடுகளில் காலை தேநீர் முதல் இரவு உணவு தயாரிப்பது வரை அனைத்து வேலைகளையும் செய்வது வீட்டு பணியாளர் தான்.

உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் டெல்லியில் வந்து குவிந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் இவர்களின் கோரிக்கைகள் ஒன்றுபோலவே இருக்கின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான தேசிய அமைப்பு (National Platform for Domestic Workers) ஒன்று இருக்கிறது.

வேலைக்கான ஊதியத்தையும், பணி நேரத்தையும் நிர்ணயிப்பது, மாதத்திற்கு நான்கு நாள் விடுமுறை, உரிய முறையில் நடத்துவது, சமூக பாதுகாப்பு ஆகியனவே இவர்களின் பலகால கோரிக்கையாக உள்ளது.

மேலும், விடுமுறை எடுக்க எங்களுக்கு உரிமையில்லை, ஏன் சம்பளம் கேட்பது கூட தவறானதாக கருதப்படும். ஊதிய உயர்வு வேண்டும் என்று கேட்கவே அச்சமாக இருக்கும். எத்தனை வேலை செய்தாலும் அதில் திருப்தியடையாமல், சின்ன வேலை தானே, இதையும் முடித்துவிட்டுப் போ என்று அதிகாரம் செய்வார்கள் முதலாளிகள் என்பதே அவர்களின் புலம்பலாக உள்ளது.

இவற்றையும் தாண்டி டெல்லியில் நடந்துள்ள இந்த சம்பவங்கள் போல் பல கொடூரங்களும் சத்தமின்றி அரங்கேறிவிடுகின்றன.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget