மேலும் அறிய

Crime: அப்பாவின் நண்பருடன் தகாத உறவு.. ”கண்டித்ததால் ஆத்திரத்தில் கொன்றேன்..” மகள் வாக்குமூலம்..

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி சுரேஷ் குமார் திடீரென உயிரிழந்தார். அவர் மது குடித்ததில் இறந்ததாக ஆர்த்தி பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார்.

கன்னியாகுமரியில் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மகளும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே கடுக்கரை ஆலடி காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். 47 வயதான இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். சுரேஷ் குமாருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2வது மகளுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். முதல் மகளாக ஆர்த்தியுடன் சுரேஷ் குமார் வசித்து வந்தார். 

இப்படியான கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி சுரேஷ் குமார் திடீரென உயிரிழந்தார். அவர் மது குடித்ததில் இறந்ததாக ஆர்த்தி பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார். சுரேஷ் குமார் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ்குமார் தலையில் காயம் இருந்ததாகவும், அவர் கழுத்து நெறிக்கப்பட்டு இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் மர்ம மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு மகள் ஆர்த்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தந்தை சுரேஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். 

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, ‘ஆர்த்தி தான் அப்பாவை கொலை செய்ததாக கூறிய நிலையில் அவர் ஒருவர் மட்டும் இதை செய்திருக்க முடியாது என போலீசார் கருதியுள்ளனர். உடனடியாக தனிப்படை அமைத்து அவரின் செல்போனை ஆய்வு செய்தனர். இதில் ஆர்த்திக்கு ஏராளமான ஆண் நண்பர்கள் இருந்தது தெரிய வந்தது. 

அதில் ஒரு செல்போன் நம்பரில் இருந்து பலமுறை அழைப்பு வந்துள்ளது கண்டறியப்பட்டது. அது தெரிசனங்கோப்பு வாட்ஸ்புரத்தை சேர்ந்த சுரேஷ் பாபு என்பது தெரிய வந்தது. அவர் சுரேஷ் குமாரின் நெருங்கிய நண்பர் என்பது கண்டறியப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரிடமும் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

வெல்டிங் பட்டறை நடத்தி வரும் சுரேஷ்பாபு, சுரேஷ்குமாருக்கு மிகவும் நெருக்கம். இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். இதில் சுரேஷ்குமார் போதையில் தூங்கியதும், சுரேஷ் பாபு ஆர்த்தியுடன் தனிமையில் இருப்பது வழக்கமாக இருந்துள்ளது. அப்படி ஒருநாள் இருவரும் ஒன்றாக இருந்ததை சுரேஷ்குமார் போதை தெளிந்து பார்த்துள்ளார். ஆத்திரத்தில் தகாத வார்த்தைகள் பேசியுள்ளார். இதனால் கடுப்பான சுரேஷ் பாபு அவரை கீழ தள்ள தலையில் அடிபட்டுள்ளது.பின்னர் அவர் வயிற்றில் மிதித்து கொலை செய்துள்ளனர். 

சுரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்துள்ளது. இதில் 2-வது மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் மற்ற இருவரும் பிரிந்து சென்று விட்டனர் என கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Embed widget