மேலும் அறிய

Crime: சத்தமாக ஒலித்த ஆபாச பாடல்.. நிறுத்தச்சொன்னதால் பட்டியலினத்தவர் கொடூர கொலை

வீட்டின் அருகே சத்தமாக ஒலித்த ஆபாச பாடலை நிறுத்த சொன்ன பட்டியலினத்தவரை, துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கெடுவாய்ப்பாக பட்டியலின, சிறுபான்மையின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு எதிராக அரங்கேறும் கொடூர சம்பவங்கள் கவலையளிக்கும் விதத்திலே உள்ளது. தற்போது அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆபாச பாடல்:

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பதல்கஞ்ச். இந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ருடாவ்லி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர். இவருக்கு வயது 45. பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபர் சுனில்யாதவ்.

சுனில் யாதவ் அந்த பகுதியில் சிறு, சிறு தகராறில் அவ்வப்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டவிரோதமாக சுரங்க வேலையிலும் ஈடுபடுவதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று சுனில் யாதவ் கிஷோர் வீட்டு அருகே தனது டிராக்டரில் சென்றுள்ளார். அங்கு தனது டிராக்டரை நிறுத்திவிட்டு டிராக்டரில் உள்ள ஸ்பீக்கர் மூலமாக ஆபாச பாடல்களை ஒலிக்கவிட்டுள்ளார்.

சுட்டுக்கொலை:

அந்த ஆபாச பாடல்களை மிக சத்தமாக சுனில்யாதவ் ஒலிக்கவிட்டதால் கிஷோர்குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, கிஷோர்குமார் சுனில்யாதவிடம் சென்று ஆபாச பாடலை நிறுத்துமாறு கூறியுள்ளார். தன்னை பாடலை நிறுத்துமாறு கிஷோர்குமார் கூறியதால் ஆத்திரமடைந்த சுனில்யாதவ், உடனே 10க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த அந்த கும்பல் சுனில் யாதவுடன் இணைந்து கிஷோர்குமாரையும், அவரது குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. அப்போது, சுனில் யாதவ் தன்னை பாடலை நிறுத்துமாறு கூறிய சுனில்யாதவை ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதில் கிஷோர்குமார் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மாயாவதி கண்டனம்:

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறியந்த போலீசார் சுனில்யாதவ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுனில் யாதவ் உள்பட குற்றவாளிகள் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகளின் மன உறுதி எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம் இது. சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு தலித் குடும்பத்தை தாக்கி, ஒருவரை கொலை செய்துள்ளது. இது மிகவும் வேதனையானது மற்றும் கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Cyber crime: டாஸ்கை முடிக்க சொல்லி டாட்டா காண்பித்த ஆன்லைன் மோசடி கும்பல் - ரூ. 3 லட்சத்தை இழந்த இன்ஜினியர்

மேலும் படிக்க: Crime: நெல்லை அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது; ஜாதிய படுகொலையா...? - போலீஸ் விளக்கம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
Kalki 2898 AD: கல்கி படத்தின் டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? வடமாநிலத்தின் உச்சத்தில் பிரபாஸ்!
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
ராயல் என்ஃபீல்டில் அதிவேகம்! காரில் தட்டி விபத்து! இளைஞர்கள் மீது ஏறி இறங்கிய லாரி! செங்கல்பட்டில் பரிதாபம்!
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
உதயநிதி பெயரை உபயோகப்படுத்திய திமுக எம்.பிக்கள்! விளாசித்தள்ளிய ஜெயக்குமார்!
உதயநிதி பெயரை உபயோகப்படுத்திய திமுக எம்.பிக்கள்! விளாசித்தள்ளிய ஜெயக்குமார்!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Jobs: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget