மேலும் அறிய

Crime: சத்தமாக ஒலித்த ஆபாச பாடல்.. நிறுத்தச்சொன்னதால் பட்டியலினத்தவர் கொடூர கொலை

வீட்டின் அருகே சத்தமாக ஒலித்த ஆபாச பாடலை நிறுத்த சொன்ன பட்டியலினத்தவரை, துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கெடுவாய்ப்பாக பட்டியலின, சிறுபான்மையின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு எதிராக அரங்கேறும் கொடூர சம்பவங்கள் கவலையளிக்கும் விதத்திலே உள்ளது. தற்போது அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆபாச பாடல்:

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பதல்கஞ்ச். இந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ருடாவ்லி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர். இவருக்கு வயது 45. பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபர் சுனில்யாதவ்.

சுனில் யாதவ் அந்த பகுதியில் சிறு, சிறு தகராறில் அவ்வப்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டவிரோதமாக சுரங்க வேலையிலும் ஈடுபடுவதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று சுனில் யாதவ் கிஷோர் வீட்டு அருகே தனது டிராக்டரில் சென்றுள்ளார். அங்கு தனது டிராக்டரை நிறுத்திவிட்டு டிராக்டரில் உள்ள ஸ்பீக்கர் மூலமாக ஆபாச பாடல்களை ஒலிக்கவிட்டுள்ளார்.

சுட்டுக்கொலை:

அந்த ஆபாச பாடல்களை மிக சத்தமாக சுனில்யாதவ் ஒலிக்கவிட்டதால் கிஷோர்குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, கிஷோர்குமார் சுனில்யாதவிடம் சென்று ஆபாச பாடலை நிறுத்துமாறு கூறியுள்ளார். தன்னை பாடலை நிறுத்துமாறு கிஷோர்குமார் கூறியதால் ஆத்திரமடைந்த சுனில்யாதவ், உடனே 10க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த அந்த கும்பல் சுனில் யாதவுடன் இணைந்து கிஷோர்குமாரையும், அவரது குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. அப்போது, சுனில் யாதவ் தன்னை பாடலை நிறுத்துமாறு கூறிய சுனில்யாதவை ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதில் கிஷோர்குமார் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மாயாவதி கண்டனம்:

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறியந்த போலீசார் சுனில்யாதவ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுனில் யாதவ் உள்பட குற்றவாளிகள் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகளின் மன உறுதி எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம் இது. சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு தலித் குடும்பத்தை தாக்கி, ஒருவரை கொலை செய்துள்ளது. இது மிகவும் வேதனையானது மற்றும் கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Cyber crime: டாஸ்கை முடிக்க சொல்லி டாட்டா காண்பித்த ஆன்லைன் மோசடி கும்பல் - ரூ. 3 லட்சத்தை இழந்த இன்ஜினியர்

மேலும் படிக்க: Crime: நெல்லை அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது; ஜாதிய படுகொலையா...? - போலீஸ் விளக்கம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget