மேலும் அறிய

Crime: சத்தமாக ஒலித்த ஆபாச பாடல்.. நிறுத்தச்சொன்னதால் பட்டியலினத்தவர் கொடூர கொலை

வீட்டின் அருகே சத்தமாக ஒலித்த ஆபாச பாடலை நிறுத்த சொன்ன பட்டியலினத்தவரை, துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கெடுவாய்ப்பாக பட்டியலின, சிறுபான்மையின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு எதிராக அரங்கேறும் கொடூர சம்பவங்கள் கவலையளிக்கும் விதத்திலே உள்ளது. தற்போது அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆபாச பாடல்:

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பதல்கஞ்ச். இந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ருடாவ்லி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர். இவருக்கு வயது 45. பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபர் சுனில்யாதவ்.

சுனில் யாதவ் அந்த பகுதியில் சிறு, சிறு தகராறில் அவ்வப்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டவிரோதமாக சுரங்க வேலையிலும் ஈடுபடுவதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று சுனில் யாதவ் கிஷோர் வீட்டு அருகே தனது டிராக்டரில் சென்றுள்ளார். அங்கு தனது டிராக்டரை நிறுத்திவிட்டு டிராக்டரில் உள்ள ஸ்பீக்கர் மூலமாக ஆபாச பாடல்களை ஒலிக்கவிட்டுள்ளார்.

சுட்டுக்கொலை:

அந்த ஆபாச பாடல்களை மிக சத்தமாக சுனில்யாதவ் ஒலிக்கவிட்டதால் கிஷோர்குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, கிஷோர்குமார் சுனில்யாதவிடம் சென்று ஆபாச பாடலை நிறுத்துமாறு கூறியுள்ளார். தன்னை பாடலை நிறுத்துமாறு கிஷோர்குமார் கூறியதால் ஆத்திரமடைந்த சுனில்யாதவ், உடனே 10க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த அந்த கும்பல் சுனில் யாதவுடன் இணைந்து கிஷோர்குமாரையும், அவரது குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. அப்போது, சுனில் யாதவ் தன்னை பாடலை நிறுத்துமாறு கூறிய சுனில்யாதவை ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதில் கிஷோர்குமார் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

மாயாவதி கண்டனம்:

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறியந்த போலீசார் சுனில்யாதவ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுனில் யாதவ் உள்பட குற்றவாளிகள் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகளின் மன உறுதி எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம் இது. சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு தலித் குடும்பத்தை தாக்கி, ஒருவரை கொலை செய்துள்ளது. இது மிகவும் வேதனையானது மற்றும் கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: Cyber crime: டாஸ்கை முடிக்க சொல்லி டாட்டா காண்பித்த ஆன்லைன் மோசடி கும்பல் - ரூ. 3 லட்சத்தை இழந்த இன்ஜினியர்

மேலும் படிக்க: Crime: நெல்லை அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது; ஜாதிய படுகொலையா...? - போலீஸ் விளக்கம்

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget