மேலும் அறிய

மாணவி பெயரில் போலி அட்டெண்டன்ஸ் : ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்களுக்கே ஆபாச மெசேஜ்கள்..! கிருஷ்ணகிரி ஆசாமி சிக்கியது எப்படி?

ஆன்லைன் வகுப்புகளில் போலியாக, மாணவி பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டம் வீராச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 26 வயது மோகன்குமார் என்கிற இளைஞர் இணைந்துள்ளார்.

தனியார் பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச செய்திகள் அனுப்பிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்குமார் என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படாமல் உள்ளன. இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் கல்வியை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகளை எடுக்க தமிழக அரசு முடிவெடுத்து கடந்த ஓராண்டிற்கு மேலாக ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக பல முக்கிய பள்ளிகளின் தாளாளர்கள், ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதே போன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் திருவாரூர் மாவட்டத்திலும் அரங்கேறி உள்ளது என்பது பல்வேறு தரப்பினரிடையே வேதனையை தந்துள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக ஆன்லைன் மூலமாக பாடத்திட்ட வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. இதனிடையே அந்த ஆன்லைன் வகுப்புகளில் போலியாக மாணவி பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டம் வீராச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மோகன்குமார் என்கிற இளைஞர் இணைந்துள்ளார். அவர் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவிகளுக்கும் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆபாச செய்திகளையும், படங்களையும் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் கடந்த 29ஆம் தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் நேரடியாக புகார் அளித்துள்ளது.

மாணவி பெயரில் போலி அட்டெண்டன்ஸ் : ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்களுக்கே ஆபாச மெசேஜ்கள்..! கிருஷ்ணகிரி ஆசாமி சிக்கியது எப்படி?
புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து  சைபர் செல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலமாக மாணவிகளுக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய மர்ம நபர் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மாணவிகளுக்கு ஆபாச செய்திகள் அனுப்பியவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த வீராச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகனான 26 வயதுடைய மோகன்குமார் என்பது கண்டறியப்பட்டது. உடனடியாக விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் மோகன்குமாரை கைது செய்து தகவல் தொழில்நுட்ப சட்டம், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தண்டனை சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 
மேலும் இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்று குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆன்லைன் வகுப்புகளின்போது பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு விழிப்புணர்வுடன் வகுப்புகள் நடத்தவும், முறையாகத் தணிக்கை செய்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும் வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்..

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget