மேலும் அறிய

Cyber crime: முதியவரை ஏமாற்றி நூதனமுறையில் பணம் மோசடி - தஞ்சையை சேர்ந்த நபர் கைது

நமக்கு தெரியாதவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதை நிராகரிக்க வேண்டும் - சைபர் க்ரைம் போலீஸ்

தஞ்சாவூர்: திருமண மண்டபம் புக் செய்தவரிடம் இருந்து நூதன முறையில் பணம் மோசடி செய்தவரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவையாறு அருகே கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் தனது மகளுக்காக திருமண மண்டபம் புக் செய்திருந்தார். இந்நிலையில் அந்த முதியவரின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் உங்கள் மகள் திருமணத்திற்காக சமையல் காண்ட்ராக்ட்டை சேர்ந்தவர் பேசுகிறேன். எனது பெரியப்பாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். அவசரமாக பணம் தேவைப்படுகிறது. ரூ.5 ஆயிரம் அனுப்பி வையுங்கள்.

இதை நம்பிய அந்த முதியவரும் சமையல் பணிக்காக பேசிய தொகையில் பின்னர் குறைத்து கொள்ளலாம் என்று அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் அந்த முதியவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அந்த மர்மநபர் பெரியப்பாவிற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். மேலும் ரூ.6 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த தொகையையும் அந்த நபர் கூறிய கணக்கிற்கு முதியவர் அனுப்பி உள்ளார். திருமண நாளின் போதுதான் அந்த முதியவருக்கு தான் புக் செய்த சமையல்காரர் பேசவில்லை, வேறு யாரோ பேசி தன்னை ஏமாற்றி உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அந்த முதியவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சைபர் க்ரைம் ஏடிஜிபி சந்தோஷ் குமார், எஸ்.பி., தேவராணி மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் ஆகியோர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி முத்தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொ) ராமதாஸ், சப்-இனஸ்பெக்டர்கள் ரோஸ்லின் அந்தோணியம்மாள், கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த முதியவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கை வைத்து விசாரித்தபோது அது மணத்திடல் பகுதியில் உள்ள ஆன்லைன் சேவை மையம் என்று தெரிய வந்துள்ளது. அங்கு மேற்கொண்ட விசாரணையில் அந்த பணத்தை மஹாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆன்லைன் சேவை மையத்திற்கு மாற்றி விட்டதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மணப்புரம் ஆன்லைன் சேவை மையத்தில் இருந்து நேரடியாக ஒரு தொகையும் மற்றொரு தொகை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு ஆன்லைன் சேவை மையத்திற்கு மாற்றி அங்கிருந்து பணமாக பெற்றதும் தெரியவந்தது.

அங்கு கூறப்பட்ட தகவல்களின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நூதன முறையில் பணம் மோசடி செய்தது தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் இவ்வாறு லட்சக்கணக்கில் நூதன முறையில் செந்தில்குமார் பண மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உரியவர்கள் புகார் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், இதுபோன்று செல்போன்களில் வரும் அழைப்புகளை நம்பி பணம் அனுப்பவதை தவிர்க்க வேண்டும். நமக்கு தெரியாதவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதை நிராகரிக்க வேண்டும். எனவே மக்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமாகும் என்று தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !! 14 மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி
பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் !! 14 மணி நேரத்திலேயே கழுத்தை நெரித்து கொன்ற பாட்டி
உச்சக்கட்ட அவலம்: வேலை செய்யாத சிடி ஸ்கேன்... இரவில் மருத்துவர்களே இல்லாத அரசு மருத்துவமனைகள்!
உச்சக்கட்ட அவலம்: வேலை செய்யாத சிடி ஸ்கேன்... இரவில் மருத்துவர்களே இல்லாத அரசு மருத்துவமனைகள்! "நாங்க எங்கதான் போறது?" பொதுமக்கள் வேதனை..

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget