மேலும் அறிய

Crime: கோயிலில் பழக்கம்; குளிர்பானத்தில் சயனைடு - இளம்பெண்ணை போட்டுத்தள்ளிய பூசாரி! நடந்தது என்ன?

பரிகாரம் செய்ய கோயிலுக்கு அழைத்து குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ். பெங்களூரில் கல் உடைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, கடந்த 15 ஆம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என அவரது கணவர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் தாரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வியை தேடி வந்தனர். இந்த நிலையில், காவல்துறையினர் விசாரணையில் பசுவராஜ் மற்றும் செல்வி இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதால் அவர் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவார் எனத் தெரிய வந்தது. இந்த நிலையில் சேலம் மாநகர் இரும்பாலை காவல் நிலையத்தில் பெருமாம்பட்டி பகுதியில் உள்ள முள்ளனேரி பெரியாண்டிச்சி கோயிலுக்கு பின்புறத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அங்கு சென்ற இரும்பாலை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Crime: கோயிலில் பழக்கம்; குளிர்பானத்தில் சயனைடு - இளம்பெண்ணை போட்டுத்தள்ளிய பூசாரி! நடந்தது என்ன?

விசாரணையில் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வியின் சடலம் என்பது தெரியவந்தது. உடனடியாக தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் செல்வி குழந்தை பாக்கியம் இல்லாததால் அவ்வப்போது பெரியாண்டிச்சி கோயிலுக்கு வந்து பரிகாரம் செய்வது வழக்கம் என்றும், இதனால் அங்கிருந்த கோயில் பூசாரி குமாருக்கும் செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி காலை 11 மணி அளவில் செல்வியை பெரியாண்டிச்சி கோயிலுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என குமார் அழைத்துள்ளார். அப்போது செல்விக்கு கொடுக்கப்பட்ட குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக பெரியாண்டிச்சி கோயில் பூசாரி குமாரை கைது செய்தனர். மேலும் எதற்காக பூசாரி குமார், செல்வியை கொலை செய்தார்? செல்வியின் உடலில் காயங்கள் உள்ளதால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? பூசாரிக்கு சயனைடு எப்படி கிடைத்தது? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget