மேலும் அறிய

கடலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு

’’பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகை கொடுத்து, ஈடு செய்ய முடியாது என்றாலும் மாநில அரசு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து 10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு’’

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினருக்கு தினமும் இரவு சாப்பாடு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி கடந்த 12.2.2019 அன்று அந்த சிறுமி, தனது உறவினர் வீட்டுக்கு இரவு 7 மணி அளவில் சாப்பாடு கொண்டு சென்றாள். பின்னர் சாப்பாடு கொடுத்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது, சேத்தியாத்தோப்பு- கும்பகோணம் சாலையில் உள்ள அவர்களது குல தெய்வம் கோவில் அருகில் வந்த போது, குமாரக்குடியை சேர்ந்த பாலகுரு என்பவரின் மகன் திலகர் என்கிற குணசேகரன் (34) மற்றும் தொழிலாளி கட்டமணியார் என்கிற ஜெயசங்கர் (49) ஆகிய 2 பேரும், அந்த சிறுமியை வழிமறித்தனர்.
 

கடலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
 
தொடர்ந்து அந்த சிறுமியை திலகர் தாக்கியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை 2 பேரும் கடத்தி சென்று அங்குள்ள கோவிலுக்கு பின்னால் கொண்டு சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை 2 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி சென்றனர். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார், உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.
 

கடலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
 
இது பற்றி அவரது தாய் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலகர், ஜெயசங்கர் ஆகிய 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் சிறுமியை தாக்கிய திலகருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 1000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், சிறுமியை கடத்திச்சென்ற குற்றத்திற்காக திலகர், ஜெயசங்கருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.
 

கடலூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிப்பு
 
இது தவிர சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 2 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகை கொடுத்து, ஈடு செய்ய முடியாது என்றாலும், அவர் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யும் வகையில், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர், மாநில அரசு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget