மேலும் அறிய

நாளை நிச்சயதார்த்தம்...காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்...பெற்றோர் எடுத்த விபரீத முடிவு..!

சிதம்பரம் அருகே திருமணம் நிச்சயம் செய்ய இருந்த மகள் காதலனுடன் சென்றதால் தாய் தந்தை இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்- போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே திருமணம் நிச்சயம் செய்ய இருந்த மகள் காதலனுடன் சென்றதால் தாய், தந்தை இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (65), தனது மனைவி சுமதியுடன் வயலில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புதுச்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
போலீசார் நடத்திய விசாரணையில், சுந்தரமூர்த்தி மகள் புஷ்பரோகினி ( வயது 19) சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். இவருக்கு நாளை பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது.
 
இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சென்ற புஷ்ப ரோகினி தான் ஏற்கனவே காதலித்து வந்த வேலங்கிப்பட்டு சேர்ந்த பால்ராஜ்  என்பவருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கல்லூரி செல்வதாக சொல்லி விட்டு சென்ற மகள் வீடு திரும்பாத நிலையில் மகளை பல இடங்களில் தேடி உள்ளனர் விசாரித்து பார்த்ததில் மகள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
 
 இந்த நிலையில் தாய், தந்தை இருவரும் நேற்று காலை வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த
 சேகர் என்பவரின் வயலில் நெல்லுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து இறந்து விட்டனர். அவரது மகன் சந்திரசேகரன் என்பவர் அம்மா, அப்பாவை காணவில்லை என்று தேடிச் சென்றபோது இருவரும் இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சடலத்தை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். காதலனுடன் சென்ற மகளால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிதம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே உங்களுக்குத்தான்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Sunita Williams Return: சுனிதா வில்லியம்ஸ் எத்தனை மணிக்கு பூமிக்கு வர்றாங்க? எப்படி நேரலையில் பார்ப்பது?
Annamalai:
Annamalai: "பக்தர்கள் உயிரிழப்புக்கு சேகர்பாபுதான் பொறுப்பு" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு
IPL 2025 Coach:
IPL 2025 Coach: "பாண்டிங் முதல் பதானி வரை" 10 அணிக்கும் பயிற்சியாளர்கள் யார்? யார்?
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை... முதியவரை போக்சோவில் கைது செய்த போலீசார்
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
NEET PG 2025: இனி 2 ஷிஃப்டுகளில் நீட் முதுகலைத் தேர்வு; தேதி அறிவிப்பு- வலுக்கும் எதிர்ப்புகள்!
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
India Post GDS Result: இந்திய அஞ்சல் துறையில் 21,413 பணியிடங்கள்; ஜிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Fact Check: அரசுப்பள்ளி விழாவில் கட்டிப்பிடித்து நடனமாடும் மாணவ- மாணவி?- வைரல் வீடியோ- நடந்தது என்ன?
Embed widget