மேலும் அறிய

ஊர்காவல் படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - கடலூரில் போலி டிஎஸ்பி கைது

’’பணம் வாங்கி வெகு நாட்கள் ஆகியும் வேலை வாங்கித்தராமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், மகாதேவன் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார்’’

கடலூர், ரெட்டிச்சாவடி காவல் சரகம், பெரிய காட்டுப்பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபி கே.ரமணன் என்பவரின் மகன் கௌதம் (22), கடலூர் அரசு கலைக் கல்லூரியில் கணினி படிப்பு படித்து இடையில் நின்றவர். இவர், தன்னை காவல்துறை டிஎஸ்பி., மற்றும் ஊர்காவல் படையில் அதிகாரியாக உள்ளதாக மற்றவர்களிடம் கூறி நம்ப வைத்துள்ளார். அந்த வகையில், பண்ருட்டி அடுத்துள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி மகாதேவன் (38), என்பவர் மற்றும் கூழ் கடை நடத்தி வரும் சுமதி ஆகியோரிடம் ஊர்காவல் படையில் அதிகாரியாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ரூ.30 ஆயிரம் கொடுத்தால் ஊர்காவல் படையில் வேலை வாங்கி தருவதாகவும், மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வரும் எனக்கூறினாராம். இதை நம்பிய மகாதேவன் தனது உறவினர் மகன் தீர்த்தமலை (28), மற்றும் சுமதி தனது மகன் ஸ்ரீநாத் (24) வேலை வாங்கி தரும்படிக் கூறி கௌதமிடம் பணம் கொடுத்து உள்ளனர்.
 
 

ஊர்காவல் படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - கடலூரில் போலி டிஎஸ்பி கைது
 
இதனிடையே, புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தில் உள்ள ஒரு கணினி மையத்திற்குச் சென்று காவல் துறை அதிகாரி என அறிமுகம் செய்துக்கொண்டு போலியான பணி நியமன ஆணையை தயாரித்து, அதை மேற்படி நபர்களிடம் காட்டி எஞ்சியப்பணத்தை கேட்டு பெற்றுள்ளார். இதனிடையே கௌதம் பணம் வாங்கி வெகு நாட்கள் ஆகியும் வேலை வாங்கித்தராமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், மகாதேவன் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் க.சந்திரன், உதவி ஆய்வாளர் ப.தீபன் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அண்ணா கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த கௌதமை சனிக்கிழமை காலை கைது செய்தனர். பின் அவரிடம் விசாரணை நடத்தியதில் காவல் துறை அதிகாரி எனக்கூறி ஏமாற்றியதை ஒப்புக்கொண்டு உள்ளார். இதையடுத்து, அவரிடம் இருந்து 10 ஆயிரம் பணம், டிஎஸ்பி., சீருடை ஒரு செட், பணி நியமன ஆணை தயாரிக்க பயன்படுத்திய கணினி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

ஊர்காவல் படையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - கடலூரில் போலி டிஎஸ்பி கைது
 
மேலும் இவ்வாறு பல பேர் தங்களை காவல் அதிகாரியாக கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர், ஆதலால் மக்கள் ஏமாறாமல் யார் அரசு வேலைக்கு என்று பணம் கேட்டாலும் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறையினர் கூறினர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget