![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime: 'பேய் விரட்டுவேன்': இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. உ.பி.யில் கொடூரம்!
உடலில் புகுந்த ஆவியை வெளியேற்றுகிறேன் என்று கூறி இளம்பெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: 'பேய் விரட்டுவேன்': இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. உ.பி.யில் கொடூரம்! Crime uttar pradesh young women assault by man she was expelling an evil sprit of her body Crime: 'பேய் விரட்டுவேன்': இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. உ.பி.யில் கொடூரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/15/516e37f6b2ca2c8970d3e4c3881ce6cc1697372491446572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime: உடலில் புகுந்த ஆவியை வெளியேற்றுகிறேன் என்று கூறி இளம்பெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை:
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடைய 18 வயது மகளை மோதிலால் என்ற 52 வயதுடைய ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். இவர், தனக்கு மந்திர, தந்திரங்கள் தெரியும் என்று கூறி இருக்கிறார். இதனால், மிர்சாபூரைச் சேர்ந்த குடும்பத்தினர் உங்களுடைய மகளுக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறி உள்ளார். இதனை அடுத்து, இளம்பெண்ணின் உடலில் பிடித்த பேயை நான் ஓட்டி விடுவேன் என்று கூறி, பணமும் கேட்டிருக்கிறார். அதாவது, இதற்கான பூஜைக்காக ரூ.4 ஆயிரம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனை நம்பிக் கொண்டு இளம்பெண்னின் பெற்றோர்களும் பூஜைக்கான பணத்தை மோதிலாலிடம் கொடுத்தனர். பின்னர், கடந்த வியாழன்கிழமை மாலை இளம்பெண்ணின் தந்தை, அவருடைய மகளை மோதிலாலிடம் அழைத்து சென்று இருக்கிறார். அந்த நபர், இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். பதோஷி நகர் தர்வாசி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலின் பின்பக்கத்தில் அழைத்து சென்றிருக்கிறார். இதன்பின்பு, ஒரு அறைக்கு அழைத்து சென்ற மோதிலால், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.
கைது:
இதனை அடுத்து, 3 மணி நேரத்திற்கு பிறகு மோதிலால் அந்த பெண்ணை அழைத்து கொண்டு வெளியே வந்துள்ளார். அந்த பெண்ணிடம், நாளை மீண்டும் வர வேண்டும் என்றும், இதுபற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார் மோதிலால்.
பின்னர், வீட்டிற்கு வந்த இளம்பெண் இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், இளம்பெண்ணுக்கு அளித்த பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மோதிலால் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க
Crime: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர்.. 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!
Crime: காதலிக்க மறுத்த இளம்பெண்.. 13 முறை கத்தியால் குத்திய இளைஞர்...டெல்லியில் ஷாக்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)