மேலும் அறிய

Crime: கொலை வழக்கில் சிக்கியவர் திடீர் மாயம்; எரித்துக் கொலையா? என போலீஸ் விசாரணை

மங்கலம் அருகே சிறுமி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்து வந்தவர் மாயமாகியுள்ளார். அவர் எரித்துக் கொல்லப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியில் பெரிய ஏரிக்கரை அருகே பாலானந்தல் கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமத்துக்கு செல்லும் சாலையில் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று விழுந்து கிடந்துள்ளது. அதன் அருகே ரத்தக்கரையும் இருந்துள்ளது. செல்போன் ஒன்றும் இருந்துள்ளது. அதன் அருகே சாலையோரம் இருந்த வைக்கோல் போர் ஒன்றும் எரிந்து சாம்பலாகி இருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் சந்தேகம் படும்படி இருந்ததால் உடனடியாக மங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நஸ்ருதீன் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் கீழே இருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில் அந்த இருசக்கர வாகனம் செல்போன் ஆகியவை திருவண்ணாமலை அருகில் உள்ள பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் வயது (33) என்பவருடையது என காவல்துறையினருக்கு தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவருடைய மனைவி மணிகண்டன்  நேற்று இரவு வீட்டில் இருந்து சென்றதாகவும் இன்று வரையில் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும் காணாமல் போன மணிகண்டன்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மங்களம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவியை கடத்தி சென்று கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மணிகண்டனின் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கினாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்தனர்.

 


Crime: கொலை வழக்கில் சிக்கியவர் திடீர் மாயம்;  எரித்துக் கொலையா?  என போலீஸ் விசாரணை

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் காவல்துறையினர் தகவல் சேகரித்தனர். அவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வரவில்லை என்பது தெரியவந்தது இதற்கிடையே எரிந்த நிலையில் உள்ள வைக்கோல் போரில் உடல் பாகம் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் பரிசோதித்தனர். அப்படி எதுவும் சிக்கவில்லை, பின்னர் காவல்துறையினர் மோப்ப நாய் மியாவ் வரவைத்து மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காணாமல் போன மணிகண்டன் நிலை குறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் முன்விரோதம் காரணமாக எதிர் தரப்பினர் அவரை கடத்தி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன மணிகண்டனுக்கு திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது. இதனால் மங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.