மேலும் அறிய

Crime: நெல்லையில் பயங்கரம்: ஆட்டோவை வழிமறித்து ஓட்டுநர் படுகொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...

அக்கம் பக்கத்தினர் முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து சென்று  விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாதுரை 65.. இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.. இந்த நிலையில்  நேற்று விஜயகுமார் சவாரிக்காக நெல்லைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மேலச்செவல் அருகே வெள்ள நீர் கால்வாய் பணிகள் நடைபெறும் பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மர்ம  கும்பல் விஜயகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.. இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிர் இழந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் முன்னீர் பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் காவல்துறையினர் விரைந்து சென்று  விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகலறிந்த விஜயகுமாரின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து விஜயகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..  மேலும் கொலை நடந்த பகுதியில் பதற்றத்தை தணிக்க சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.. இருப்பினும் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது..  தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் கொலைக்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. கடந்த ஓரிரு மாதங்களாக நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பாஜக பிரமுகர் கொலை உள்பட இருபதுக்கும் மேற்பட்ட கொலைகள்  நடந்துள்ளது..  இந்த நிலையில் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.. கொலை சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
"மனிதனை மனிதன் சுமப்பதா?" - விசிகவினர் வீதியில் இறங்கி போராட்டம்..!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Kia UpComing SUV: ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget