மேலும் அறிய

Crime: கிருஷ்ணகிரியில் கொள்ளையடித்து கோவாவிற்கு டூர் சென்ற திருடன் - தேடிச்சென்று கைது செய்த போலீஸ்..!

கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டில் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து கோவாவுக்கு சுற்றுலா சென்ற திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Crime : கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டில்  நகைகளை கொள்ளையடித்து கோவாவுக்கு சுற்றுலா சென்ற திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

50 சவரன் கொள்ளை

கிருஷ்ணகிரி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மோகன். இவரது வெளியூர் சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  வெளியூர் சென்றிருந்த மோகன் வீட்டிற்கு வந்தபோது, நகைளை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கடந்த 15ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

கோவாவிற்கு விரைந்த தனிப்படை

அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தண்டேகுப்பத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. இதுமட்டுமின்றி, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றது தெரிந்தது. கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இவர் இதுபோன்று நகைகளை திருடி, அதனை விற்று, சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

உடனே தனிப்படை போலீசார் கொள்ளையனை பிடித்த கோவாவிற்கு விரைந்தனர்.  அங்கு தலைமறைவாக இருந்த கொள்ளையன் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த கிருஷ்ணகிரி காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர் சில உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

விசாரணையில் அம்பலம்

இதனையடுத்து, விசாரணையில் கூறியதாவது, கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூரில் சிவக்குமார் என்பரின் வீட்டில் 17 சவரன் தங்க நகைகளும், பழையபேட்டை  செல்வராஜ் பகுதியில் உள்ள அம்மு என்பவரது வீட்டில் 5 சவரன் நகைகளும், காவேரிப்பட்டிணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டில் 7 சவரன் நகைகளும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

இதுமட்டுமின்றி, கொள்ளையடித்த அனைத்து நகைகளையும் தனது நண்பரின் வீட்டில் மறைத்து வைத்திருப்பதையும் ஒப்புக்கொண்டார். இதனால் அவரது நண்பர்களான வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி, விமல் ஆகியோரின் போலீசார் சோதனை செய்து மறைத்து வைத்திருந்த 80 சவரன் நகைகளை  பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து, சதீஷ்குமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு வீடுகளில் நகைகள் திருட்டுபோன சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. 


மேலும் படிக்க

Crime : கோவையில் பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற ரவுடி : காயமடைந்த நிலையில் மருந்துமனையில் அனுமதி

Crime: பெண்ணின் இதயத்தை வெட்டி சமைத்த கொடூரம்...குடும்பத்தினருக்குக் கொடுத்து அவர்களையும் கொன்ற பயங்கரம்..!

 

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Embed widget