மேலும் அறிய

Accident: ஆந்திராவில் வேறு வேறு இடங்களில் கார் விபத்துகள்.. இதுவரை 8 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்..!

திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர பிரதேசத்தில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி மற்றும் கிருஷ்ணா மாவட்டம் என இருவேறு இடங்களில் இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளது. 

4 பேர் உயிரிழப்பு:

 நெல்லூர் இந்துகூர்பேட்டையை சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம்  சென்றபோது விபத்துக்குள்ளானது. 

திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம் எம் கொங்கரவாரிபாலம் என்ற இடத்தில் கார் கல்வெட்டில் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த 2 பேர் பலத்த காயம், கவலைக்கிடமான நிலையில் ஒருவர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்தின் போது காரில் மூன்று உடல்கள் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் கடுமையாகப் போராடி அவர்களின் உடல்களை மீட்டனர். சாலையை சரிவர பார்க்காமல் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என போலீசார் நடந்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த அனைவரும் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.  

மற்றொரு விபத்து: 

கிருஷ்ணா மாவட்டம் பாபுலபாடு மண்டலம் கொடுருபாடு ஹெச்பி பெட்ரோல் பங்க் அருகே பயங்கர சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். தகவலின் பேரில் அனுமன் சந்திப்பு சிஐ அல்லு லட்சுமி நரசிம்மமூர்த்தி, வீரவள்ளி எஸ்ஐ சிரஞ்சீவி மற்றும் அவர்களது போலீசார் குழு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொவ்வூரில் இருந்து தமிழகத்திற்கு காரில் சென்றபோது இந்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தவர்கள் விவரம்: சுவாமிநாதன் (40), ராகேஷ் (12), ராதாபிரியா (14), கோபி (23) சம்பவ இடத்திலேயே இறந்தனர். சத்யா (28) (சுவாமிநாதனின் மனைவி) பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும், ஆந்திரா அடுத்த காக்கிநாடாவிலும் கார் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் விஜயநகரத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும், விபத்து குறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை. 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget