மேலும் அறிய

Crime: சூட்கேஸில் கிடந்த உடல் பாகங்கள்... ஹோட்டல் உரிமையாளரை துண்டாக துண்டாக வெட்டிய கொடூரம்... ஷாக் வாக்குமூலம்...!

கேரளாவில் ஹோட்டல் உரிமையாளரை கடத்தி சென்று, அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Crime : கேரளாவில் ஹோட்டல் உரிமையாளரை கடத்தி சென்று, அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கொலை செய்துவிட்டு இப்போதெல்லாம் அந்த சடலங்களை சுடுகாட்டில் புதைப்பது கிடையாது. நேராக சடலத்தை ஃப்ரிட்ஜிலும், சூட்கேஸிலும் தான் வைத்து விடுகின்றனர். டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலையை போலவே இப்போதும், ஒரு கொடுமை நம் நாட்டில் நடந்துள்ளது.

சூட்கேஸில் உடல் பாகங்கள்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் நகரில் வசித்து வந்தவர் சித்திக் (58). இவர் கோழிக்கோடு எலத்திபாலம் ஹோட்டல் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இவரது குடும்பத்தினர் நான்கு நாட்களாக தேடி வந்தும் கிடைக்காததால் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவ செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவரது வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையில், நேற்று காலை பாலக்காடு அருகே அட்டப்பாடியை அடுத்த அகளி வனப்பகுதியில் பெரிய சூட்கேஸ் ஒன்று திறந்து கிடந்தது. 

துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

அதில் ஆண் ஒருவரின் உடல்  துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உடல் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டது மாயமான ஹோட்டல் உரிமையாளர் சித்திக் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, யார் கொலை செய்தது என்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் சித்திக் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த பாலக்காடு செற்புழச்சேரி நகரைச் சேர்ந்த சிபில் (36) மற்றும் பர்ஹானா (34) ஆகியோர் மாயமானதாக தகவல் கிடைத்தது. அப்போது இவர்கள் இருவரும் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சந்தேகத்தின் பேரில் போலீசார் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டன்ர். அப்போது சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்

பரபர வாக்குமூலம்

அதன்படி, ”சித்திக்கின் ஹோட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தோம். ஆனால் கடந்த 18ஆம் தேதி சித்திக் எங்களை வேலையில் இருந்து நீக்கினார். இதனால் எங்களுக்கு போதுமான அளவில் வருமானம் இல்லை. இந்த கோபத்தில் அவரிடம் இருந்து பணம் பறிக்கவும், கொலை செய்யவும் கடந்த 23ஆம் சித்திக்கை அவரது காரிலேயே கடத்தி கோழிக்கோடு அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றோம்.

அங்கு அவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து, அகளி வனப்பகுதியில் வீசி சென்றதாகவும், இதற்கு உதவியாக எனது தம்பிக்கு ஆஷிக்கும் இருந்ததாக” வாக்குமூலம் அளித்தனர்.  இதனை அடுத்து, ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்த குற்றத்திற்காக சிபில், பர்ஹானா, அவரது தம்பி ஆஷிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Embed widget