மேலும் அறிய

Crime: சூட்கேஸில் கிடந்த உடல் பாகங்கள்... ஹோட்டல் உரிமையாளரை துண்டாக துண்டாக வெட்டிய கொடூரம்... ஷாக் வாக்குமூலம்...!

கேரளாவில் ஹோட்டல் உரிமையாளரை கடத்தி சென்று, அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Crime : கேரளாவில் ஹோட்டல் உரிமையாளரை கடத்தி சென்று, அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கொலை செய்துவிட்டு இப்போதெல்லாம் அந்த சடலங்களை சுடுகாட்டில் புதைப்பது கிடையாது. நேராக சடலத்தை ஃப்ரிட்ஜிலும், சூட்கேஸிலும் தான் வைத்து விடுகின்றனர். டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலையை போலவே இப்போதும், ஒரு கொடுமை நம் நாட்டில் நடந்துள்ளது.

சூட்கேஸில் உடல் பாகங்கள்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் நகரில் வசித்து வந்தவர் சித்திக் (58). இவர் கோழிக்கோடு எலத்திபாலம் ஹோட்டல் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இவரது குடும்பத்தினர் நான்கு நாட்களாக தேடி வந்தும் கிடைக்காததால் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவ செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவரது வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையில், நேற்று காலை பாலக்காடு அருகே அட்டப்பாடியை அடுத்த அகளி வனப்பகுதியில் பெரிய சூட்கேஸ் ஒன்று திறந்து கிடந்தது. 

துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்

அதில் ஆண் ஒருவரின் உடல்  துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் அடைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உடல் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டது மாயமான ஹோட்டல் உரிமையாளர் சித்திக் என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, யார் கொலை செய்தது என்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் சித்திக் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த பாலக்காடு செற்புழச்சேரி நகரைச் சேர்ந்த சிபில் (36) மற்றும் பர்ஹானா (34) ஆகியோர் மாயமானதாக தகவல் கிடைத்தது. அப்போது இவர்கள் இருவரும் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சந்தேகத்தின் பேரில் போலீசார் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டன்ர். அப்போது சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்

பரபர வாக்குமூலம்

அதன்படி, ”சித்திக்கின் ஹோட்டலில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தோம். ஆனால் கடந்த 18ஆம் தேதி சித்திக் எங்களை வேலையில் இருந்து நீக்கினார். இதனால் எங்களுக்கு போதுமான அளவில் வருமானம் இல்லை. இந்த கோபத்தில் அவரிடம் இருந்து பணம் பறிக்கவும், கொலை செய்யவும் கடந்த 23ஆம் சித்திக்கை அவரது காரிலேயே கடத்தி கோழிக்கோடு அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றோம்.

அங்கு அவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து, அகளி வனப்பகுதியில் வீசி சென்றதாகவும், இதற்கு உதவியாக எனது தம்பிக்கு ஆஷிக்கும் இருந்ததாக” வாக்குமூலம் அளித்தனர்.  இதனை அடுத்து, ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்த குற்றத்திற்காக சிபில், பர்ஹானா, அவரது தம்பி ஆஷிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget