மேலும் அறிய

Crime: கரூரில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் - 11 பேர் கைது

கரூர் தோகைமலையில் தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த தோகைமலை தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 29,625 ரொக்க பணம் மற்றும் 5 இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Crime: கரூரில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் - 11 பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டதில் பணம் வைத்து சூதாட்டம் நடத்திவந்தது தெரியவந்தது. 


Crime: கரூரில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் - 11 பேர் கைது

அதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தோகைமலையை சேர்ந்த செல்வம் (40), மகேஸ்வரன் (34), தினேஷ் (26), ராக்கம்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (52), சங்காயிபட்டியை சேர்ந்த சரவணன் (40), விஜயன் (36), பழனிச்சாமி (42), நாடக்காப்பட்டியை சேர்ந்த பொன்னுச்சாமி (35), உப்பிலியப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (33), வடிவேல் (45), கன்னிமார்பாளையத்தை சேர்ந்த குமரேசன் (30) ஆகிய 11 பேரை பிடித்த தனிப்படை போலீசார் தோகைமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Crime: கரூரில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் - 11 பேர் கைது

அதனையடுத்து அவர்களிடமிருந்த10 செல்போன்கள், ரொக்க பணம் ரூ.29,625, மற்றும் 5 இரு சக்கர வாகனங்களை தோகைமலை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து  சூதாட்டம் நடத்திய ஏஜன்ட் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குபதிந்து, அவர்களை குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பிறகு குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.

பொது மக்களுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

கிருஷ்ணராயபுரம், ஏப்ரல் 21 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் இவர் ஆடு வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று தனது ஆட்டை காணவில்லை என பிச்சம்பட்டி சின்ன வாய்க்கால் பாலம் அருகே கையில் அறிவாலுடன் நின்று கொண்டு, அந்த வழியாக சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரப்பன் வைத்திருந்த அறிவாலை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது விற்றவர் கைது

கிருஷ்ணராயபுரம்,ஏப்ரல் 21 கரூர் மாவட்டம் லாலாபேட்டை போலீசார் லாலாபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஜெகன் முத்துராமலிங்கம் தாலியம்பட்டி நான்கு ரோடு அருகே மது பாட்டில்களை படிக்க வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்த அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயிக்கு கட்டிக்குத்து நில புரோக்கர் கைது

தாலுக்கா மயிலம்பட்டியை சேர்ந்தவர் வீரமலை விவசாயி .இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது சங்கி பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த நில புரோக்கர் வீரமலை என்பவர் விவசாயி வீரமலையிடம், நான் வாங்கும் நிலத்தை விற்க விடாமல் கொடுக்கிறாயா என்று ஆபாச வார்த்தைகளால் பேசி, கத்தியால் வீரமலையின் நெஞ்சில் குத்தியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த விவசாயி வீரமலை சிகிச்சைக்காக மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிந்து நில புரோக்கர் வீரமலையை கைது செய்தார்.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget