மேலும் அறிய

Crime : ஓடும் பேருந்தில் பெண் கழுத்தறுத்து கொலை...அலறிய பயணிகள்...என்ன நடந்தது...?

சொத்து தகராறில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Crime : சொத்து தகராறில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரின் மனைவி தமயந்தி (42). கோபி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக அதே பகுதியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கோபிக்கு அதே பகுதியில் வசித்து வரும் அவரின் அண்ணன் ராஜாங்கத்துக்கும் இடையே நீண்ட நாட்களாகவே சொத்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த சொத்து பிரச்சனை தொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தனியார் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமயந்தி, நேற்று மாலை 4 மணியளவில் சொத்து பிரச்சனை தொடர்பாக வழக்கறிஞரைச் சந்திப்பதற்காக திண்டுக்கல்லுக்கு தனியார் பேருந்தில் புறப்பட்டார்.   தமயந்தி ஏறிய பேருந்தில் அவரது கணவரின் அண்ணன் ராஜாங்கம் ஏறினார். உலுப்பக்குடியிலிருந்து திண்டுக்கல்லை நோக்கிச் சென்ற பேருந்தில் ராஜாங்கம் அவரின் 14 வயது மகனுடன் ஏறினார். 

அந்த பேருந்து கோபால்பட்டியை அடுத்த வடுக்கம்பட்டி அருகே வந்தபோது, ராஜாங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தமயந்தியின் கழுத்தை வெட்டியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். தமயந்தியை வெட்டிவிட்டு அந்த இடத்தில் தனது மகனை விட்டுவிட்டு, பேருந்தில் இருந்து தப்பியோடினார்.

பேருந்து சீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தமயந்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டு போலீசார் தமயந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜாங்கத்தை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Crime: கழுத்தை நெரித்துக் கொன்றேன்.. வெளிநாட்டில் மனைவி, 2 குழந்தைகளைக் கொன்ற கணவர் ஒப்புதல்.. பதைபதைக்கும் வாக்குமூலம்

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய வழக்கு: மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

CM Stalin : ‘மாநில நலனுக்கு எதிரான வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர்’ : முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 7 செ.மீ மழைப்பொழிவு
Breaking News LIVE 5th OCT 2024: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 7 செ.மீ மழைப்பொழிவு
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Haryana Elections: ஹரியானா தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 90 தொகுதிகள், 1,031 வேட்பாளர்கள், 2.03 கோடி வாக்காளர்கள், தப்புமா பாஜக ஆட்சி?
Breaking News LIVE 5th OCT 2024: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 7 செ.மீ மழைப்பொழிவு
Breaking News LIVE 5th OCT 2024: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில், 7 செ.மீ மழைப்பொழிவு
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: வீக் எண்ட்..! 13 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Oct 5: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today: சிம்மத்துக்கு மதிப்பு அதிகரிக்கும், கன்னிக்கு பொருளாதார சிக்கல் குறையும்- உங்கள் ராசிக்கான பலன்
Kulasai Dussehra 2024: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் நெகிழ்ச்சி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றம்! பக்தர்கள் நெகிழ்ச்சி
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Embed widget