மேலும் அறிய

வீடுபுகுந்து குழந்தைகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்; 43 சவரன் நகைகள், 18 லட்சம் ரொக்கம் கொள்ளை - திண்டுக்கல்லில் துணிகரம்

Crime : திண்டுக்கல்லில் குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : திண்டுக்கல்லில் குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடு புகுந்து கொள்ளை:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி கலையரசி (35). இந்த தம்பதிக்கு தனுஸ்ரீ என்ற 14 வயது மகளும், ராமச்சந்திரன் என்ற 7 வயது மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சீனிவாசன் வேலை விஷியமாக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இருந்தனர்.  அப்போது முகமூடி அணிந்த 5 பேர் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டின் வளாகத்திற்கு நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தைகள் 2 பேரை பிடித்து கொண்டனர்.

பின்பு, அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருக்கும் நகை, பணத்தை எடுத்து தர வேண்டும் என கலையரசியை மிரட்டியுள்ளனர்.  அதற்கு அவர் வீட்டில் எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் சோதனை செய்த அவர்கள்,  பீரோவில் இருந்து நகை, பணத்தை எடுத்தனர்.  அதன்பிறகு கலையரசி அணிந்திருந்த நகையையும் மிரட்டி வாங்கினர். 43 சவரன்  நகை மற்றும் ரூ. 18 லட்சத்தை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்து செல்போன்களையும் எடுத்து, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.

போலீசார் விசாரணை:

பின்பு, சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சீனிவாசன் பொருட்கள் எல்லாம் சிதறி கண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கலையரசி அவரது கணவரிடம் கூறினார்.  இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.  இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சோதனை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.  மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

ரியல் எஸ்டேம் வேலை செய்து வரும் சீனிவாசன், அப்பகுதியில் உள்ள  நிலத்தை வாங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 19-ந் தேதி வங்கியில் இருந்து ரூ.18 லட்சத்தை எடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த நிலத்தை அவர் வாங்கவில்லை. இதனால் அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் தனது வீட்டிலேயே வைத்திருக்கிறார். எனவே அவருக்கு தெரிந்த நபர்கள் யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க

Pongal Gift: இன்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு, வீடாக விநியோகம்..! பரிசுத்தொகுப்பு பெறுவது எப்படி..?

Crime: கல்லூரி மாணவர்கள்தான் டார்கெட்; போதை மாத்திரை கும்பல் தலைவன் கைது - 17 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல்..!

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற இளைஞர் - பொதுமக்கள் தர்ம அடி
பள்ளி மாணவியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற இளைஞர் - பொதுமக்கள் தர்ம அடி
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
இனோவா கார் ஆசையில் விழுந்த ‘அடி’... இன்ஸ்டாகிராம் ஆடையில் வந்த ‘இடி’... புதுச்சேரியை உலுக்கிய ஆன்லைன் கொள்ளை!
இனோவா கார் ஆசையில் விழுந்த ‘அடி’... இன்ஸ்டாகிராம் ஆடையில் வந்த ‘இடி’... புதுச்சேரியை உலுக்கிய ஆன்லைன் கொள்ளை!
BT Arasakumar : 100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” - அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு
Ramadoss vs Arul : இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
இணைந்த அப்பா- மகன்.! ராமதாஸை நம்பியதால் பல கோடியை இழந்துட்டோம்- கதறும் பாமக அருள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Financial Changes: ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
ஆதார் தொடங்கி பாஸ்போர்ட் வரை - ஜுலை 1 முதல் எகிறப்போகும் செலவுகள் - மாற்றங்கள் என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
VAIKO MDMK : அய்யோ.. நான் அப்படி சொல்லவே இல்லை.. ஒரே நாளில் பல்டி அடித்த வைகோ - நடந்தது என்ன.?
அய்யோ.. நான் அப்படி சொல்லவே இல்லை.. ஒரே நாளில் பல்டி அடித்த வைகோ - நடந்தது என்ன.?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
Embed widget