மேலும் அறிய

வீடுபுகுந்து குழந்தைகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்; 43 சவரன் நகைகள், 18 லட்சம் ரொக்கம் கொள்ளை - திண்டுக்கல்லில் துணிகரம்

Crime : திண்டுக்கல்லில் குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : திண்டுக்கல்லில் குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடு புகுந்து கொள்ளை:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி கலையரசி (35). இந்த தம்பதிக்கு தனுஸ்ரீ என்ற 14 வயது மகளும், ராமச்சந்திரன் என்ற 7 வயது மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சீனிவாசன் வேலை விஷியமாக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இருந்தனர்.  அப்போது முகமூடி அணிந்த 5 பேர் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டின் வளாகத்திற்கு நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தைகள் 2 பேரை பிடித்து கொண்டனர்.

பின்பு, அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருக்கும் நகை, பணத்தை எடுத்து தர வேண்டும் என கலையரசியை மிரட்டியுள்ளனர்.  அதற்கு அவர் வீட்டில் எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் சோதனை செய்த அவர்கள்,  பீரோவில் இருந்து நகை, பணத்தை எடுத்தனர்.  அதன்பிறகு கலையரசி அணிந்திருந்த நகையையும் மிரட்டி வாங்கினர். 43 சவரன்  நகை மற்றும் ரூ. 18 லட்சத்தை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்து செல்போன்களையும் எடுத்து, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.

போலீசார் விசாரணை:

பின்பு, சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சீனிவாசன் பொருட்கள் எல்லாம் சிதறி கண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கலையரசி அவரது கணவரிடம் கூறினார்.  இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.  இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சோதனை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.  மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

ரியல் எஸ்டேம் வேலை செய்து வரும் சீனிவாசன், அப்பகுதியில் உள்ள  நிலத்தை வாங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 19-ந் தேதி வங்கியில் இருந்து ரூ.18 லட்சத்தை எடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த நிலத்தை அவர் வாங்கவில்லை. இதனால் அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் தனது வீட்டிலேயே வைத்திருக்கிறார். எனவே அவருக்கு தெரிந்த நபர்கள் யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க

Pongal Gift: இன்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு, வீடாக விநியோகம்..! பரிசுத்தொகுப்பு பெறுவது எப்படி..?

Crime: கல்லூரி மாணவர்கள்தான் டார்கெட்; போதை மாத்திரை கும்பல் தலைவன் கைது - 17 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல்..!

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget