மேலும் அறிய

Crime : அடுத்த மாதம் திருமணம்: கடிதம் எழுதி வைத்துவிட்டு தனியார் நிறுவன பெண் அதிகாரி தற்கொலை....சென்னையில் அதிர்ச்சி...!

அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தனியார் நிறுவன பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தனியார் நிறுவன பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (31). இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது. அவரது பெற்றோர்கள் திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு அவரது பெற்றோர்கள் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெயந்தியின் பெற்றோர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றுவிட்டனர். ஜெயந்தியின் சகோதரர் கல்லூரிக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஜெயந்தி மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனை அடுத்து கல்லூரி முடிந்து அவரது சகோதரர் மாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டிற்கு வெளியே நின்று கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே புடவையால் மின் விசிறியில் ஜெயந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர், இதுகுறித்து அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கு ஜெயந்தியின் சசோதரர் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் ஜெயந்தியின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனை அடுத்து, சேலையூர் போலீசார் அவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது ஜெயந்தி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர் "தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை" என்று மட்டும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தற்கொலை செய்து கொண்ட ஜெயந்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலமாக நிலம் வாங்குவதற்காக வங்கியில் கடன் வாங்கி தவணை முறையில் பணத்தை கட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயந்தி தற்கொலை செய்து கெண்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் படிக்க

Crime : பதறவைக்கும் செங்கல்பட்டு பயங்கரம்; பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு 3 பேர் தப்பியோட்டம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தல், வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி - ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்..!
வயநாடு இடைத்தேர்தல்,வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி: ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Breaking News LIVE: அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
TNPSC Answer Key: அடடே.. நடத்திய அத்தனை தேர்வுக்கும் 1 வாரத்துக்குள் விடைக் குறிப்பு- டிஎன்பிஎஸ்சி அசத்தல்!
TNPSC Answer Key: அடடே.. நடத்திய அத்தனை தேர்வுக்கும் 1 வாரத்துக்குள் விடைக் குறிப்பு- டிஎன்பிஎஸ்சி அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERSVijay TVK Maanadu | மாநாட்டில் வெடிக்கும் சர்ச்சைகள் மரத்தை வெட்டிய த.வெ.கவினர்?சீறும் சமூக ஆர்வலர்கள்Vijay | விஜய்க்கு நோட்டீஸ்..  மாநாடு நேரத்தில் நெருக்கடி.. மீண்டும் சிக்கலில் த.வெ.க?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தல், வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி - ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்..!
வயநாடு இடைத்தேர்தல்,வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி: ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Breaking News LIVE: அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE: அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்
TNPSC Answer Key: அடடே.. நடத்திய அத்தனை தேர்வுக்கும் 1 வாரத்துக்குள் விடைக் குறிப்பு- டிஎன்பிஎஸ்சி அசத்தல்!
TNPSC Answer Key: அடடே.. நடத்திய அத்தனை தேர்வுக்கும் 1 வாரத்துக்குள் விடைக் குறிப்பு- டிஎன்பிஎஸ்சி அசத்தல்!
TN Rain Alert: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - ”டானா” புயல் சென்னை நிலவரம், வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - ”டானா” புயல் சென்னை நிலவரம், வானிலை மையம் எச்சரிக்கை
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
Diwali Celebration: தெரிஞ்சுகோங்க! தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா கொண்டாட்றாங்க?
Diwali Celebration: தெரிஞ்சுகோங்க! தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா கொண்டாட்றாங்க?
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
Embed widget