![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime : இன்ஸ்டாகிராமில் வேறொரு நபருடன் பேசிய சிறுமி... நடுரோட்டில் அடித்தே கொன்ற பள்ளி மாணவன்....என்ன நடந்தது...?
இன்ஸ்டாகிராமில் வேறொரு நபருடன் பேசிய சிறுமியை, பள்ளி மாணவர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime : இன்ஸ்டாகிராமில் வேறொரு நபருடன் பேசிய சிறுமி... நடுரோட்டில் அடித்தே கொன்ற பள்ளி மாணவன்....என்ன நடந்தது...? Crime boy killed girlfriend after she talks to someone in instagram in jharkhand Crime : இன்ஸ்டாகிராமில் வேறொரு நபருடன் பேசிய சிறுமி... நடுரோட்டில் அடித்தே கொன்ற பள்ளி மாணவன்....என்ன நடந்தது...?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/11/15c77aa16ee8aa6ee5488ca1912576701678520032047571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime : இன்ஸ்டாகிராமில் வேறொரு நபருடன் பேசிய சிறுமியை, பள்ளி மாணவர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிட்டு மக்கள் ரசித்து வருகின்றனர். மேலும், இன்ஸ்டாகிராம் மூலம் பல விபரீதங்களும் ஏற்படுகின்றன. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் பெண்களும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஆங்காங்கே கொலை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
வேறொரு நபருடன் பேசிய சிறுமி
அந்தவகையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள 17 வயது பள்ளி மாணவனை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், சில நாட்களாக அந்த சிறுமி இன்ஸ்டாகிராமை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனை அறிந்த அந்த பள்ளி மாணவன் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது பற்றி கேட்டுள்ளார். ஆனால் இதற்கு அந்த சிறுமி சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். ஒரு நாள், அந்த சிறுமி இன்ஸ்டாகிராமில் வேறொரு நபருடன் பேசுவதை அந்த மாணவன் பார்த்துள்ளார்.
இரும்பு கம்பியால் அடித்து கொலை
உடனே இது பற்றி சிறுமியிடம் இதுபோன்று வேறொரு நபருடன் பேசுவதை நிறுத்தவேண்டும் என்று கண்டித்துள்ளார். இதனை கேட்காமல் அந்த சிறுமி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமி கடந்த புதன்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாட தனது நண்பர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
செல்லும் வழியில் அந்த சிறுமியை வழிமறித்து அந்த சிறுமியிடம் இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் பேசுவது பற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், அந்த பள்ளி மாணவன் வைத்திருந்த இரும்பு கம்பியால் சிறுமியை சரமாரியாக அடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
புகார்
ஹோலி பண்டிகை கொண்டாட சென்ற தனது மகள் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று காலை மாணவியின் உடல் வயல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி உடல் கிடந்த இடத்திற்கு அருகில் இரும்பு கம்பியும், செல்போனும் இருந்ததை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கெண்டு, மாணவியை கொலை செய்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், மாணவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime : மனைவியின் மாதவிடாய் ரத்தத்தை விற்ற கணவர், மாமியார்.. அகோரி பூஜைக்காக செய்த பகீர் செயல்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)