மேலும் அறிய

Crime : மனைவியின் மாதவிடாய் ரத்தத்தை விற்ற கணவர், மாமியார்.. அகோரி பூஜைக்காக செய்த பகீர் செயல்..

அகோரி பூஜைக்காக ஒரு பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : அகோரி பூஜைக்காக ஒரு பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நவீன காலத்திலும் மாந்திரீகம், அகோரி பூஜை என்று பலர் நம்பி வருகின்றனர். நம்புவது மட்டுமின்றி பலரை இதில் ஈடுபடுத்தி அவர்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் மாந்திரீகத்திற்காக குழந்தைகள் உட்பட  பலர் இதற்கு உயிரிழக்கின்றனர். உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ எதாவது பிரச்சனை இருப்பவர்கள்,  இதை செய்தால் சரியாகும் என்ற மூட நம்பிக்கையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது புனேவில் நடந்துள்ளது.

கணவர் கொடுமை

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்கள் கழித்து அவரது கணவர், மாமியார் மற்றும் மாமனார் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பொறுத்து பொறுத்து பார்த்திருந்த அந்த பெண் ஒரு கட்டத்தில் அவரது பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்தார்.

பின்னர், அவரது பெற்றோருடன் காவல்நிலையம் சென்று புகார் அளித்தார்.  வரதட்சணை கேட்டு தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

கட்டிவைத்து, மாதவிடாய் ரத்தத்தை எடுத்த கொடூரம்

அதில், ”மாதவிடாயின்போது  தனது கை, கால்களை கட்டிபோட்டு ரத்தத்தை  சேகரித்து அதனை அகோரி பூஜை மற்றும் மாந்திரீக பூகைக்காக தனது மாமியார் கணவர் எடுத்து செல்வார்கள். இதனையே பல மாதங்களை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்கு மாமனார், மைத்துனர் என பலர் இதற்கு உடந்தைகயாக இருந்து வந்தனர். தனது மாதவிடாய் ரத்தத்தை எடுத்து மந்திரவாதியிடம் ரூ.50 ஆயிரத்தை விற்பனையும் செய்ததாக" பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மாமியார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை

மேலும், மகாராஷ்டிரா மாநிலம் மகளிர் ஆணையத்தின் தலைவி ரூபாலி சகங்கர் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் அகோரி பூஜைக்காக பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இது மனித குலத்தையே களங்கப்படுத்திய அவமானமான சம்பவம்.

இதுபோன்ற குற்றங்களில் இருந்த பெண்களை பாதுகாக்கவும், சமூகத்தில் அவர்களை வலுப்படுத்தவும் இன்னும் எவ்வளவு போராட்டம் அவசியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 


மேலும் படிக்க

Crime: கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்ட பெண்.. மின்கம்பத்தில் கட்டிப்போட்டு சித்திரவதை.. குமரியில் கொடூரம்..

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: கூட்டணியில் திமுக இல்லாதது வருத்தம் தான்.. ஓபனாக சொன்ன திருமாவளவன்!
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
Aadhav Arjuna: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
அரிவாளை எடுத்து வெட்டனும்.. தப்பு செய்ய விடுங்க..! டி.ஆர்.பாலு பேசுன பேச்சை பாருங்க
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
Embed widget