மேலும் அறிய

Crime : மனைவியின் மாதவிடாய் ரத்தத்தை விற்ற கணவர், மாமியார்.. அகோரி பூஜைக்காக செய்த பகீர் செயல்..

அகோரி பூஜைக்காக ஒரு பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : அகோரி பூஜைக்காக ஒரு பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நவீன காலத்திலும் மாந்திரீகம், அகோரி பூஜை என்று பலர் நம்பி வருகின்றனர். நம்புவது மட்டுமின்றி பலரை இதில் ஈடுபடுத்தி அவர்களை கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் மாந்திரீகத்திற்காக குழந்தைகள் உட்பட  பலர் இதற்கு உயிரிழக்கின்றனர். உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ எதாவது பிரச்சனை இருப்பவர்கள்,  இதை செய்தால் சரியாகும் என்ற மூட நம்பிக்கையில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தற்போது புனேவில் நடந்துள்ளது.

கணவர் கொடுமை

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்கள் கழித்து அவரது கணவர், மாமியார் மற்றும் மாமனார் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. பொறுத்து பொறுத்து பார்த்திருந்த அந்த பெண் ஒரு கட்டத்தில் அவரது பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்தார்.

பின்னர், அவரது பெற்றோருடன் காவல்நிலையம் சென்று புகார் அளித்தார்.  வரதட்சணை கேட்டு தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

கட்டிவைத்து, மாதவிடாய் ரத்தத்தை எடுத்த கொடூரம்

அதில், ”மாதவிடாயின்போது  தனது கை, கால்களை கட்டிபோட்டு ரத்தத்தை  சேகரித்து அதனை அகோரி பூஜை மற்றும் மாந்திரீக பூகைக்காக தனது மாமியார் கணவர் எடுத்து செல்வார்கள். இதனையே பல மாதங்களை வழக்கமாக வைத்திருந்தனர். இதற்கு மாமனார், மைத்துனர் என பலர் இதற்கு உடந்தைகயாக இருந்து வந்தனர். தனது மாதவிடாய் ரத்தத்தை எடுத்து மந்திரவாதியிடம் ரூ.50 ஆயிரத்தை விற்பனையும் செய்ததாக" பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மாமியார் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை

மேலும், மகாராஷ்டிரா மாநிலம் மகளிர் ஆணையத்தின் தலைவி ரூபாலி சகங்கர் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் அகோரி பூஜைக்காக பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தை எடுத்து ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இது மனித குலத்தையே களங்கப்படுத்திய அவமானமான சம்பவம்.

இதுபோன்ற குற்றங்களில் இருந்த பெண்களை பாதுகாக்கவும், சமூகத்தில் அவர்களை வலுப்படுத்தவும் இன்னும் எவ்வளவு போராட்டம் அவசியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் ஆணையம் கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 


மேலும் படிக்க

Crime: கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்ட பெண்.. மின்கம்பத்தில் கட்டிப்போட்டு சித்திரவதை.. குமரியில் கொடூரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget