மேலும் அறிய

ஆரணியில் விவசாயியை கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

ஆரணியில் முன் விரோதம் காரணமாக விவசாயியை கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில் ஆறு பேருக்கு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் வயது (50) இவர் விவசாயி. இவருடைய மனைவி சவுத்திரி இந்த தம்பதியினருக்கு தங்கராஜ் என்ற மகனும், பூங்குழலி , உமாமகேஸ்வரி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் நேரு வயது 65 விவசாயி இவர்கள் இருவருக்கும் அதே கிராமத்தில் விவசாயம் நிலம் உள்ளது சுந்தருக்கும் நேருவிற்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந் தேதி விவசாய நிலத்தில் பவர் டில்லரில் உழவர் பணி மேற்கொண்டு இருந்தார். அப்போது சுந்தர் எதிர்பாராத விதமாக நேருவின் நிலத்தில் உள்ள வரப்பை உழதுள்ளார். இதனால் நேருவிற்கும் சுந்தருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நேரு உழவு பணி மேற்கொண்டு இருந்த சுந்தரை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பொழுது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த நேருவின் அண்ணன் தம்பிகள் உறவினர்களான சேட்டு வயது (66), சகாதேவன் வயது (47) , வெங்கடேசன் வயது (42) அன்பு அவருடைய மகன் சக்திவேல் வயது (28) மற்றும் நேருவின் மகன் சடையாண்டி வயது (30) ஆகியோர் அவர்கள் கொண்டு வந்த கத்தி இரும்பு ராடு கொடுவா உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுந்தரை கூட்டாக சேர்ந்து கத்தியால் வெட்டியும் அடித்தும் கொலை செய்துள்ளனர்.

 


ஆரணியில் விவசாயியை  கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

பின்னர் கொலையை மறைப்பதற்காக சுந்தர் உழவு மேற்கொண்ட அவரது பவர் டில்லர் வண்டியில் கட்டி அருகில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.அதனைத் தொடர்ந்து அன்று இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சாவித்திரி மற்றும் உறவினர்கள் நிலத்துக்கு சென்றனர். அப்போது சுந்தர், பவர் டில்லருடன் கிணற்றில் பிணமாக கிடந்தார். இது சம்பந்தமாக சுந்தரின் மனைவி சாவித்திரி ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அவர் கொலை செய்யப்பட்டு பவர் டில்லருடன் கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த விநாயகத்தின் மகன்கள் நேரு , சேட்டு ,சகாதேவன், வெங்கடேசன் , நேருவின் மகன் சடையாண்டி , உறவினர் அன்பு மகன் சக்திவேல் ஆகியோர் சுந்தரை கொலை செய்ததை காவல்துறையினர் உறுதி செய்தனர்.


ஆரணியில் விவசாயியை  கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

இதனையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த கொலை வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே. விஜயா தீர்ப்பு கூறினார். அதில் 6 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூபாய் 3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பின்போது வெங்கடேசன் மட்டும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மற்ற 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget