மேலும் அறிய

Crime: பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நண்பர்கள்.. ம.பி.யை தொடர்ந்து ஆந்திராவிலும் அதிர்ச்சி!

சமீப காலமாக, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் மீதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொடரும் கொடூரங்கள்

சமீப காலமாக, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் மீதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் பழங்குடி இளைஞர், சிறுமி ஒருவரை காதலித்த காரணத்தால் ஆறு இளைஞர்கள் சேர்ந்து அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் பெயர் மொட நவீன். கடந்த ஜூன் 19ஆம் தேதி, மன்னம் ராமாஞ்சநேயுலு என்பவரும் எட்டு நபர்களும் சேர்ந்து நவீனை தாக்கியுள்ளனர். அதோடு நின்று விடாமல், அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர்.

வாயில் சிறுநீர் கழித்த கொடூர கும்பல்

அந்த எட்டு பேரில் இருவர் சிறார்கள் ஆவர். ராமாஞ்சநேயுலு, தற்போது தலைமறைவாக உள்ளார். இந்த சம்பவத்தை விவரித்த பிரகாசம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகா கார்க், "ராமாஞ்சநேயுலுவும் நவீனும் நண்பர்கள் ஆவர். ராமாஞ்சநேயுலுவுக்கு வேறொரு நண்பர் ஒருவர் இருந்துள்ளார். அந்த நண்பரின் உறவுக்கார சிறுமியை நவீன காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ராமாஞ்சநேயுலுவுக்கும் நவீனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. சிறுமியுடன் நவீன் வீட்டை விட்டு ஓடியதை அடுத்து, அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் காவல்துறை கஸ்டடியில் வைக்கப்பட்டார்.

இருப்பினும், நவீன் அந்த சிறுமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். இது ராமாஞ்சநேயுலு மற்றும் அவரது நண்பர்களை கோபப்படுத்தியது. இதனால், இது அவர்களின் நட்பை மேலும் பாதித்தது. இருவரும் பேசி கொள்ள கூடவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, ராமாஞ்சனேயுலு நவீனை அழைத்தார். மீண்டும் நண்பர்கள் ஆகிவிடலாம் என சொல்லி ராமாஞ்சனேயுலு நாடகமாடியுள்ளார். ஆனால், மது அருந்திய பிறகு, அவரும் அவரது நண்பர்களும் நவீனை தாக்கினர். நவீன மீது அவர்கள் சிறுநீர் கழித்துள்ளார்கள்.

கைது

தாக்குதலைத் தொடர்ந்து, நவீன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், வழக்கை மேற்கொண்டு தொடரவோ அல்லது சிறுநீர் கழித்த சம்பவத்தை காவல்துறையிடம் சொல்லவோ இல்லை. இருப்பினும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போதுதான், எங்களுக்கு ஒரு வீடியோ கிடைத்தது. அதில், நவீன் மீது ராமாஞ்சனேயுலுவும் மேலும் சிலரும் சிறுநீர் கழித்தது பதிவாகியிருந்தது. குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நவீன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை போலீஸார் தானாக முன்வந்து பதிவு செய்தனர். ராமாஞ்சநேயுலுவும் நவீனும் சேர்ந்து பல கடுமையான குற்றங்களைச் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். எனவே, இது ஒரு திட்டமிட்ட சாதிய தீண்டாமை வழக்கு அல்ல. இருவரும் பால்ய நண்பர்கள். போலீசார் ராமாஞ்சநேயுலுவை தேடி வருகின்றனர்" என்றார்.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget