மேலும் அறிய

Crime : கர்நாடகாவில் கொடூரம்...4-ஆம் வகுப்பு மாணவனை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த ஆசிரியர்.. என்ன நடந்தது?

கர்நாடகாவில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுவனை ஆசிரியர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்  பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை அவனது ஆசிரியர் முத்தப்பா மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போது ஆத்திரம் குறையாத  அவர், மாணவனை முதல் மாடியின் பால்கனியில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் பாரத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனின் தாயார் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்று வருகிறார். அவரையும் ஆசிரியர் முத்தப்பா கடுமையாக தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  மாணவனை தாக்கிய ஆசிரியர் முத்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து உறுதியான  தகவலும் வெளியாகவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், தலைமறைவாக உள்ள ஆசிரியரை தேட ஒரு குழு அமைக்கப்பட்டது என்று போலீசார் கூறியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

டெல்லியிலும் கொடூரம்

தலைநகர் டெல்லியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்த வகுப்பின் ஜன்னல் வழியாக வீசி எறிந்துள்ளார். இந்த சம்பவம் நாட்டையே அதிர்சியில் உறைய வைத்துள்ளது. டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 நிகார் நிகாம் பாலிகா வித்யாலயா பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி வந்தனா. இவர் வழக்கம் போல் வகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது ஆசிரியர் கீதா தேஷ்வால் வந்தனாவை தாக்கியுள்ளார். கத்தரிக்கோலால் மாணவியை அவரை தாக்கியுள்ளார். பின்னர் அவர் வந்தனாவை வகுப்பறையில் இருந்த ஜன்னல் வழியாக கீழே வீசியுள்ளார். கீதாவை தடுக்க ரியா என்ற ஆசிரியர் எவ்வளவு முயன்றுள்ளார். ஆனால் கீதா அந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார்.

இதனைப் பார்த்து சக குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பள்ளிக்கு வெளியே இருந்தவர்கள் குழந்தை கீழே விழுவதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நாங்கள் கீதாவை கைது செய்தோம். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. எந்தச் சூழலில் எதற்காக அவர் இந்த கொடூர செயலை செய்தார் என்று இன்னும் உறுதியாகவில்லை என்றார். சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளது. டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுஹான் இந்த வழக்கை குழு அமைத்து விசாரித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
Embed widget